நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

பிரிட்டனில் ரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்: கொலை

பிரிட்டனின் Birmingham அருகே Solihull பகுதியில் உள்ள சாலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தாயும், மகளும் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 22 மற்றும் 49 வயதுடைய தாய், மகள் இறந்த நிலையில் கிடப்பதை உறுதி செய்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது. தற்போது குற்றவாளியை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறியதாவது;
நேற்று இரவு திடீரென பெண் ஒருவர் பயங்கரமாக கத்தும் சத்தத்தை கேட்டேன். அவர் கத்தும்பொழுது வேறு ஏதோ ஒரு மொழியில் பேசினார்.
அவர் பேசியது ஆங்கிலம் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சத்தம் கேட்டு வெளியில் வந்த பொழுது, ஒரு நபர் அந்த இடத்திலிருந்து வேகமாக ஓடினார் என்று கூறியுள்ளார்.
தற்போது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
 ஏற்படுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக