நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 23 டிசம்பர், 2017

வாழ்நாளில் விளையாட்டுத்துறையில் அதிகமாக சம்பாதித்த வீரர்கள்

விளையாட்டுத்துறையில் வாழ்நாளில் அதிகமாக சம்பாதித்த வீரர்களின் பட்டியலை அமெரிக்காவை தலைமையிடமாக 
கொண்டு இயங்கும் பிரபல சஞ்சீகையொன்று வெளியிட்டுள்ளது.இதில் கூடைப்பந்தாட்டம், கோல்ப் விளையாட்டு
, கார் பந்தயம், கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, டென்னிஸ், அடிப்பந்தாட்டம் (பேஸ் போல்) ஆகிய விளையாட்டில் அதிகம் சம்பாதித்த 20 வீரர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.இதில், 1.85 பில்லியன்
 டொலர்களுடன் முன்னாள் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல் ஜோர்டன் முதலிடத்திலுள்ளார். இவருக்கு அடுத்த படியாக உலகின் பணக்கார விளையாட்டான கோல்ப் விளையாட்டில் 
பிரபலமான டைகர் வுட்ஸ் 1.7 பில்லியன் டொலர்களுடன் இரண்டாவது இடத்திலும், மற்றொரு கோல்ப் வீரரான ஆர்னெல்ட் பால்மர் 1.4 பில்லியன் டொலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.இப்பட்டியலில், இருபதாவது இடத்தில் பிலிப்பைன்ஸின்
 குத்துச் சண்டை வீரர் மேனி பேக்குயோ உள்ளார். ஆனால் இதில் கிரிக்கெட் வீரர்கள் எவருமே இடம்பெறவில்லை என்பது சற்று 
கவலைக்குரிய விடயமே. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 18 டிசம்பர், 2017

புதிய முயற்சியில் சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் பி.எம்.டபிள்யூ!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய 
தொழில்முயற்சியானது 
ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என 
எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை முன்னெடுப்பதற்கு, அங்கு செலவுகள் குறைவு என்பதே பிரதான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த திட்டமானது அடுத்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 13 டிசம்பர், 2017

துவைக்காத தலையணையை பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

    ஐந்து  வருடங்கள்  துவைக்காத தலையணையை பயன்படுத்திய சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் கண் இமையில் 100 ஒட்டுண்ணிகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.Ms Xu  என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக கண் அரிப்பு பிரச்சனையால்
 பாதிக்கப்பட்டுள்ளார். இவரது கண்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.இதனைத்தொடர்ந்து 
மருத்துவரிடம் சென்றுள்ளார். இவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கண் இமையில் 100 ஓட்டுண்ணிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கண்களில் ஒட்டுண்ணி
 பாதிப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரிக்காது என 
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பெண்மணி கடந்த 5 வருடங்களாக தான் பயன்படுத்தும் தலையணையை துவைக்காமல் வைத்திருந்துள்ளார். துவைக்காமல் தலையணையை பயன்படுத்தியதால் கண்களில் அலர்ஜி மற்றும் வெண்படல பாதிப்பால் ஒட்டுண்ணிகளின்
 எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அணு ஆயுதப்போரை கொரியத் தீபகற்பத்தில் தவிர்க்க முடியாதது’ பெரும் பரபரப்பு!!

வடகொரியா சமீபத்தில், அமெரிக்காவின் பிரதான பகுதிகளை தாக்குகிற வல்லமை கொண்ட ஏவுகணையை ஏவி சோதித்தது. மேலும், தன்னைத்தானே அணு ஆயுத நாடாகவும், ஏவுகணை நாடாகவும் அறிவித்துக்கொண்டது.அதைத் தொடர்ந்து 230 போர் விமானங்களுடன் கூடிய கூட்டு போர் பயிற்சியை அமெரிக்காவும்,
 தென்கொரியாவும் மேற்கொள்ள, அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் 
அதிகாரி ஜெப்ரி பெல்ட்மேன், சிறப்பு தூதராக வடகொரியாவுக்கு சென்றார். அவர் பியாங்யாங் நகரில்
 அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்து தெரியவில்லை.இந்தநிலையில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதப்போர் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது 
என வடகொரியா கூறி உள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘மக்களின் இதயங்களில்
 வீற்றிருக்கிற தலைவர் கிம் ஜாங் அன் மீது அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் மைக் போம்பியோ ஆத்திரம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.பெரிய 
அளவில் அணு ஆயுத போர் பயிற்சியை அமெரிக்கா நடத்தி உள்ளது. நாங்கள் போர் நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அதே நேரத்தில் நாங்கள் அணு ஆயுதப்போரில் இருந்து எங்களை 
ஒளித்துக்கொள்ள மாட்டோம். எங்கள் வல்லமையை கொண்டு அமெரிக்காவுக்கு சரியான  பதிலடி கொடுப்போம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார் .இதனால், கொரிய தீபகற்பப் பகுதியில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 25 நவம்பர், 2017

ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம்

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  விரைந்திருக்கிறார்கள் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர்.
மேலும்   குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 20 நவம்பர், 2017

ஜேர்மனியில் ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு தடை!

நாட்டின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படுவதால் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு ஜேர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது.ஜேர்மனியில் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்சுகள் அதிகளவில் உபயோகப்படுத்தபடுகின்றன.முக்கியமாக 5-லிருந்து 12 வயதுடைய குழந்தைகளை இவை குறிவைக்கின்றன. இவ்வகை வாட்சுகளில் சிம் கார்டு கூட பொருத்தமுடியும், ஆப்ஸ் மூலம் தங்கள் குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்களை கண்காணிக்கவே, உரையாடவோ
 பெற்றோரால் முடியும்.
இது ஜேர்மனியின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக இருப்பதையடுத்து விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பெடரல் நெட்வொர்க் ஏஜென்சி தலைவர் ஜோசென் ஹோமன் கூறுகையில், குழந்தைகளின் பெற்றோர்கள் இவ்வகை வாட்சுகளை உடனடியாக அழித்துவிட அறிவுறுத்தியுள்ளோம்.
எங்கள் விசாரணையில் பள்ளி வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும் பெற்றோர்கள் ஸ்மார்ட் வாட்சுகள் மூலம் கண்காணிப்பது உறுதியாகியுள்ளது.
பள்ளி நிர்வாகமும் இந்த விடயத்தில் மாணவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 27 அக்டோபர், 2017

நீங்கள் பிரிட்ஜில் முட்டை வைத்து சாப்பிடாதீங்க: தீமைகள் இதோ

 .அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைத்து பராமரிக்கும் முட்டைகள் ஆரோக்கியமற்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் மிகுந்த குளிர்ச்சியான இடத்தில் வைத்து முட்டையை பராமரிக்கும் போது, அது பால் போல் திரிந்து கெட்டு போய்விடும்.
பிரிட்ஜில் வைத்த முட்டையின் தீமைகள்?
முட்டையில் ஓடுகளில் சால்மோனெல்லா வகை பாக்டீரியா உருவாகும். இவை பாக்டீரியா தொற்றுக்களை உண்டாக்கும்.
முட்டை ஓட்டில் இருக்கும் சால்மோனெல்லா பாக்டீரியா குளிர்ச்சியான நிலையில் அதிகமாக பெருக்கம் அடைந்து, குடல் மற்றும் வயிறு தொடர்பான நோய்களை ஏற்படுத்தும்.
குறிப்பு
முட்டை பிரஷ்ஷாக இருந்து, அதன் மேல்தோல் நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்தால், அந்த முட்டையை பிரிட்ஜில் 
வைக்கக் கூடாது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிரித்தானியவில் வதை முகாம் இலகுவில் எவரும் செல்ல முடியாத தீவு

ரஷ்ய புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள்.
ஆனால் , அவர்கள் போல்ஷ்விக்குகளுடன் 
(ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்) சண்டையிடவும், அவர்களை சிறையிலடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
இந்த வகையில் ரஷ்ய மண்ணில் அவர்கள் முதல் சித்திரவதை முகாமை தொடங்கினர். அந்த இடம்தான் ‘மரணத் தீவு’ என அழைக்கப்படுகின்றது.நெருங்கிச் சென்றபோது,
 என்னால் ஒரு கலங்கரை விளக்கத்தையும், சில வானொலி கோபுரங்களையும் பார்க்க முடிந்தது. நானும், என்னுடன் வந்தவர்களும் படகிலிருந்து குதித்து, பாலைவனமாக இருந்த 
கடற்கரையில்நடந்தோம்.
அங்கிருந்த நாய்கள் எங்களை சூழ்ந்து கொண்டு குரைத்தன. அவற்றுக்கு பார்வையாளர்களை பார்த்து பழக்கமில்லை. இந்த ஆள் அரவமற்ற பகுதியில் வாழக்கூடியவர்கள், எல்லை காவலர்களும், ஒரு சில வானிலை ஆய்வாளர்களும்தான்.
சோவியத் சகாப்தத்தில், இந்த மட்யக் தீவிலுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக படகுகள் மூலமாக பார்வையாளர்கள் வந்தார்கள்.
எஞ்சியுள்ள சிறைக்கூடங்களின் எச்சங்களுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது. ஆனால் இது கடந்த 1918-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் பொறுப்பாளர்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் நாட்டவர்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.
இந்த பிராந்தியத்தின் தலைநகரான, ஆங்கிலத்தில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்-ஆர்கேன்ஜெல் என அறியப்படும் நகரில் வளர்ந்த சக பணியாளரான நடாலியா கோலிஷேவா, இந்த இடத்தின் மீது பயம் இருப்பதாகவும், உள்ளூர்வாசிகள் இதனை மரணத்தீவு என அழைப்பார்கள்
 எனவும் கூறினார்.
நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, நீ ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால், வெள்ளையர்கள் வந்து உன்னை மட்யுக்கிற்கு தூக்கிச் சென்றுவிடுவார்கள் என மக்கள் கூறுவார்கள்.
எனக்கு அது புரியாது. மட்யக் என்றால் என்ன? வெள்ளையர்கள் யார்? என நான் கேள்வி கேட்கும் போது, எனது பாட்டி வாயை மூடு என எச்சரித்துவிட்டு, முகத்தை திருப்பிக் கொள்வார். இதற்கு அர்த்தம் இத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்பதுதான். என நடாலியா
 கூறினார்.
1917-ஆம் ஆண்டு ரஷ்யப்புரட்சி ஏற்பட்ட பின்னர் வெள்ளையர்கள் என அழைக்கப்பட்ட குழுவினர் , போல்ஷ்விக்குகளுக்கு எதிரானவர்களானார்கள்.
ஜார் ராணுவத்தில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அணியும் கிரீம் நிற சீருடைகள் மூலம் அவர்களுக்கு இந்த பெயர் வந்தது.அவர்களில் சிலர் மீண்டும் முடியாட்சி வர வேண்டும் என விரும்பிய பிற்போக்கு ராணுவ அதிகாரிகள், மற்றவர்கள் மித சோஷியலிஸ்டுகள், சீர்திருத்தவாதிகள்வர்த்தகர்கள், மீனவர்கள் 
அல்லது விவசாயிகள்.
1917-ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் போல்ஷ்விக்குகள் ஆட்சியை கைப்பற்றியபோது, ஜெர்மனி மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து முதல் உலகப் போரில் ரஷ்யா தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தது.
லெனின் ஆட்சிக்கு வந்ததும் உணவு
 உற்பத்தியை பெருக்கி,உயர்குடி மக்களின் நிலத்தை பகிர்ந்தளிப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் கொண்டு வருவேன் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உறுதி அளித்தார்.
அவர் ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களில், கூட்டணித் தலையீடு என்ற பெயரில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்காண ராணுவ வீர்ர்கள் ரஷ்யாவுக்கு 
அனுப்பப்பட்டனர்.
இவர்களில் சிலர் தென் பகுதிக்கும்,  தொலைவில் உள்ள ரஷ்ய கிழக்குப் பகுதிக்கும்,  பிரிட்டனின் கீழ் இருந்த பத்தாயிரம் வீர்ர்கள் ஆர்ட்டிக் துருவப் பகுதியில் உள்ள ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கும் 
அனுப்பப்பட்டனர்.
அந்த பகுதியில் ஜெர்மானியர்கள் நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்காமல் தடுக்கவும், அங்கிருக்கும் ராணுவ மையத்தை பாதுகாப்பதும் இவர்களின் பணி என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ரஷ்ய உள்நாட்டுப் போரின் ஆரம்பக்கட்டத்தில் போதுஇ இந்த வெளிநாட்டுப் படைகள் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தனர். வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு, ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவுவது
 கவலையை அளித்தது.
1918-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி கூட்டணிப்படைகள் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கு வந்தடைந்த சில காலத்தில், அவர்கள் மக்களை சிறைபிடிக்கத் துவங்கினர்.
அவர்களுக்கு யாரை நம்ப வேண்டும் என தெரியவில்லை.யார் கம்யூனிஸ்ட்டுகள், யார் வெள்ளையர்கள் என்றும் அவர்களால் வேறுபாடு அறிய முடியவில்லை.
இதனால் சந்தேகமிருக்கும் அனைவரையும் சிறைபடுத்த அவர்கள் முடிவெடுத்தனர்.என மாஸ்கோவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான லுட்மிலா நோவிக்காவா கூறுகிறார்.
மைய சிறைச்சாலையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்ததனால், பிரச்சனை ஏற்படுத்தக்கூடியவர்களாக கருதப்பட்ட கைதிகள், அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மட்யக் தீவுக்கு இடம் மாற்றப்பட்டனர்.
அங்கு முதற்கட்டமாக கொண்டு செல்லப்பட்ட கைதிகள், தங்களுக்கான சிறைச்சாலையை தாங்களே அமைக்க
 வற்புறுத்தப்பட்டனர்.
போதுமான கழிப்பறை மற்றும் மாற்று உடைகள் வசதி இல்லாததால், அங்கிருந்த கைதிகளிடம் தைபஸ் காய்ச்சல் காட்டுத்தீ போல பரவியது. அங்கிருந்த 1000 கைதிகளில், நோய் காரணமாகவோ,சுடப்பட்டோ, சித்தரவதை செய்யப்பட்டோ 300 பேர் கொல்லப்பட்டனர்.
பனிக்காலத்தில் இங்கு தட்பவெட்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும். இதையும் கைதிகளை சித்திரவதை செய்ய பயன்படுத்திக் கொண்ட கூட்டணிப்படைகள், அங்கு ஐஸ் செல் எனப்படும் பனிக்கட்டி அறைகளை அமைத்தனர்.
இதில் அடைக்கப்படும் கைதிகள், குளிரினால் சித்திரவதை அனுபவிப்பார்கள் அல்லது உயிரிழப்பார்கள் அல்லது தோலுறைவு காரணமாக தங்கள் கால்களை இழப்பார்கள்.
சோவியத் காலகட்டத்தில், இங்கு சித்திரவதையை அனுபவித்த போல்விஷ்க்குகள் அதிகம் நினைவு கூறப்பட்டார்கள். இந்த முகாமிற்கு அருகில் உள்ள சிறிய குன்றில், 25 அடி உயரத்தில் இவர்கள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ,தலையீட்டாளர்களின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த தேச பக்தர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டது. என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
வெள்ளையர்களை போலவே போல்விஷ்க்குகளும் பல குற்றங்களை இழைத்தனர். ஆனால் அவை சோவியத் ரஷ்யாவில் பல தசாப்தங்களுக்கு குறிப்பிடப்படவில்லை. இருபுறமும் கொடுமைகள் 
அரங்கேறின.
ஆனால் அவற்றின் அளவுகள் வெவ்வேறானவை. என வரலாற்றாசிரியர் லுட்மிலா தெரிவிக்கிறார்.
வடக்கில் பல மரண முகாம்கள் போல்ஷ்விக்குகளால் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்கில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள ஹோல்கோமோரி பகுதியில் முதல் முகாம் 
அமைக்கப்பட்டது.
இங்கு மூன்றாயிரத்திலிருந்து, எட்டாயிரம் வரையிலான கைதிகள் அடைக்கப்பட்டு, அவர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்களில் பலர் வெள்ளை ராணுவ அதிகாரிகள் மற்றும் குரோன்ஸ்டாட் பகுதியைச் சேர்ந்த போல்விஷ்க்குகளுக்கு எதிராக கலகம்
 செய்த மாலுமிகள்.
ஆனால், மற்றவர்கள் எதிர் புரட்சியாளர்கள் என முத்திரை குத்தப்பட்ட மதபோதகர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள்
 என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 28 செப்டம்பர், 2017

குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸ்

அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸும் இணைந்துள்ளது
ரெண்ட் கேப் என்னும் ஓன்லைன் வலைதள நிறுவனம் $1,500 வாடகைக்கு எவ்வளவு சதுர அடி கொண்ட அடுக்குமாடி 
வீடுகள் உலகின் முக்கிய நகரங்களில் தரப்படுகிறது என்ற ஆய்வை நடத்தியது.
இதில் பிரான்ஸின் பாரீஸ் நகரம் 25வது இடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 30m² இடம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தான் கிடைப்பதாக தெரியவந்துள்ளது
இந்த பட்டியலில் தாராளமான இடம் கிடைக்கும் நகரமாக துருக்கியின் இஸ்தான்புல் முதலிடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 176m² அளவிலான இடம் தரப்படுகிறது
அதாவது பாரீஸை விட ஐந்து மடங்கு அதிகமாகும், பட்டியலில் இரண்டாமிடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரம் உள்ளது.
மூன்றாமிடத்தில் ஜெர்மனியின் பெர்லின் 139m² அளவிலான இடத்துடன் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது
இந்த விடயத்தில் பாரீஸை விட மோசமாக சான் பிரான்ஸிஸ்கோ, ஸ்விட்சர்லாந்தின் சூரிச், லண்டன் ஆகிய 
நகரங்கள் உள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கத்தியால் மனநல மருத்துவரை குத்திக் கொன்ற நோயாளி

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் அச்சுதா ரெட்டியை நோயாளி ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த அச்சுதா ரெட்டி, அமெரிக்காவில் குடியேறி மனநல மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் நடத்தி வந்த கிளினிக்கில் யோகப் பயிற்சிகள் மூலம் மனநல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் அவர் நோயாளி ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அச்சுதா ரெட்டியை கொலை செய்தவரை கான்சாஸ் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், புதன்கிழமை இரவு 7 மணியளவில்
 நோயாளி ஒருவர் அச்சுதா ரெட்டி கிளினிக்கிற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் ரெட்டியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரெட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மேலாளர் நோயாளியை தடுக்க 
முயற்சித்தார்.
அப்போது ரெட்டி அங்கிருந்து ஓடி தப்ப முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நோயாளி விடாமல் ரெட்டியை துரத்தி பிடித்து மீண்டும் வெறிதனமாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரெட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ 
இடத்திலே உயிரிழந்தார். 
மேலும் காவல்துறையினர் கொலை செய்த நோயாளியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மரக்கறிகள் வீதியில் விற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

பிலிப்பைன்ஸில் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பாடசாலையில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார்.
பொருளாதார சிக்கலால் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது
இதை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரபல நடிகையும், பாடகியுமான ஷரோன் குனெட்டா, சிறுவன் விற்கும் அனைத்து காய்கறிகளையும் தான் வாங்கி கொள்ள 
விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, குறித்த சிறுவனை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்ப தான் நினைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் வறுமை அதிகளவில் தலைவிரித்து ஆடுவதால் அந்நாட்டு சிறுவர்கள் பலர் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் குழந்தை தொழிலாளியாக வேலைக்கு செய்து
வருகிறார்கள்.
இந்நிலையில் குறித்த நடிகையின் இந்த செயல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 13 செப்டம்பர், 2017

பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தில் தவகல்கள் திருடிட்டு!

பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஹேக்கர் 44 மில்லியன் மக்களின் தவகல்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் போது பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்களினதும் தகவல் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தகவல் விபரங்கள் திருடப்பட்டுள்ள நிலையில், உங்களது பெயர் பொருட்கள் கொள்வனவு செய்தல் மற்றும் கிரெடிட் கார்ட் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் வேறொருவர் ஈடுபடலாம்.
எனவே, இந்த விடயத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Equifax நிறுவனமானது பிரித்தானியாவில் உள்ள பலரதும் தகவல்களையும் சேமித்து 
வைத்துள்ளது.
பெயர், முகவரி, கடன் பெற்றுள்ள விபரங்கள், அந்த கடனை எவ்வாறு செலுத்துகின்றனர் போன்ற விபரங்களை சேகரித்து வைத்துள்ள நிலையில், அதனை வங்கிகளுக்கும் Equifax நிறுவனம் 
வழங்குகின்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஹேக்கர்ஸ் தகவல்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 செப்டம்பர், 2017

பேனா மூலம் இலண்டன் பல்கலைக் கழகத்தில் பரீட்சை எழுதத் தடை

இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 800 ஆண்டுகள் பழைமை கொண்டது. 
இங்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி 
பயில்கின்றனர்.
இப் பல்கலைக்கழத்தில் பரீட்சைகள் வினாத்தாள்களில் பேனா மூலம் கைகளினால் எழுதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்சமயம் அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
மாணவர்களது கையெழுத்து சரிவர புரியாத நிலையில் இருப்பதாலும் பாடத்திட்டங்கள் யாவும் கணினி மூலம் பதிவு செய்து கற்பிக்கப்படுவதாலும் இம்முறைமை தடைசெய்யப்பட்டுள்ளது.
மாணவர்களது கையெழுத்து சரிவர புரியாத நிலையில் தேர்வுகளில் விடைத்தாள்களைத் திருத்தும் பேராசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இந் நிலைமை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே, பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை விதிக்கப்பட்டு கணினியில் தட்டச்சு( (Type) மூலமாக பரீட்சைகள் யாவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
எனினும், இலண்டனிலுள்ள எடின்பேர்க் (Edinburgh) பல்கலைக்கழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய முறைமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஈராக்கில் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் பிணமான இளைஞன்

ஈராக்கில் இளைஞரொருவர் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் நொடி பொழுதில் வீதியில் விழுந்து பிணமான சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிசிரிவி வீடியோவில், வீதியில் வரும் தன் நண்பரின் காருக்கு அருகே சென்ற இளைஞன், காருக்குள் இருக்கும் நண்பரிடம் குனிந்து கண்ணாடி வழியாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஏதோ வானத்திலிருந்து இளைஞரின் தலை உச்சியில் பாய, வீதியில் சரிந்த இளைஞர் எந்தவித அசைவில்லாமல் கிடக்கிறார்.
இதை கண்டு அதிர்ச்சிடைந்த அங்கிருந்த மக்கள் ஓடி வந்து இளைஞரை தூக்கி நண்பரின் காரில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.எனினும், இளைஞர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக இளைஞரை சோதனை செய்த வைத்தியர்கள் 
தெரிவித்துள்ளனர்.
வானிலிருந்து விழுந்த துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்தமையாலே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 9 செப்டம்பர், 2017

இலங்கை தமிழ் இளைஞன் கனடாவில் குத்திக் கொலை

கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர்,  பலனின்றி உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 
விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். குறித்த நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் 
உறுதி செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குகப்பிரியன் மகேந்திர ராஜா(33) கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிசார் நேற்று அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் Prosper Jean Laurent(18) என்பவரை
 பொலிசார் கைது செய்துள்ளனர்.
டொராண்டோவில் மட்டும் இந்த ஆண்டில் இதுவரை 37 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புரூஸ் லீ மனைவியின் துரோகத்தால் மாண்ட வெளியான உண்மைகள!


உலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம் 
என்பது இன்னமும் மர்மமாகவே 
இருந்து வருகிறது.
ஆனாலும் அவரது மரணம் குறித்த இரகசியக் குறிப்புக்கள் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கை மூலம் கசிந்துள்ளது.
அதன்படி அவர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்பதே அதன் முக்கிய குறிப்பாகும். இந்தக் காெலைக்கு முக்கியமான காரணம் அவரது மனைவி என்பது தான் பேரதிா்ச்சிக்குரிய விடயமாகும்.
அன்று நடந்தது என்ன?
புரூஸ்லீ உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் தனது இல்லத்திலிருந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். அப்பொழுது அவர் வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிப்படைந்திருந்தார். உடனடியாக அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அந்த நிலைமைக்கான காரணம், பெருமூளை 
வீக்கம் என கண்டறிந்தனர்.
மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தைக் குறைக்க முடிந்தாலும் மீண்டும் தலைவலி ஏற்பட்டவண்ணமேயிருந்தது. இதனால் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டது. தொடர்ந்தும் சிகிச்சையளித்துவந்த மருத்துவா்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.சிகிச்சைகள் பலனின்றி பரிதாப மரணத்தைத் தழுவினாா் புரூஸ்லீ.
இந்த நிலையில், "புரூஸ் லீ மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை, அது, ஒரு மனைவியின் மிகப்பெரிய துரோகத்தால் நடத்தப்பட்ட ஒரு படுகொலை தான்" என்று மருத்தவா்கள் கூறிய டைரி குறிப்புகள் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அப்படி என்னதான் சொல்லப்பட்டிருந்தது?
புரூஸ்லீயின் மரணத்துக்கான காரணம் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். அதாவது, ஆஸ்பிரின் மருந்து கூல்பானத்துடன் அதிக அளவில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதே அவரது மரணத்தை 
விரைவுபடுத்தியது.
சாகும் விளிம்பில் இருந்தபோது, புரூஸ் லீ எதோ சொல்ல முற்பட்டார், ஆனால் அவர் எதையும் சொல்வதற்கு அவரது மனைவி அனுமதிக்கவில்லை. இதனால் அவரது மனைவியை வெளியே அனுப்ப முயன்றோம், ஆனாலும் அவர் செல்ல மறுத்துவிட்டார்.
அம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போது 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக ஆஸ்பிரின் கரைசல் அவர் வாயில் புகட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் புரூஸ் லீயின் மனைவி சொன்ன காரணத்தையே மருத்துவமனை நிர்வாகம் திருப்பிச் 
சொல்ல முற்பட்டது.
லீ இறப்பதற்கு முன்பே அவர் இறந்து விட்டதாக ஒரு வதந்தி செய்தி வெளியே பரவியது. இதில் மருத்துவமனை நிர்வாகமும் சம்மந்தப்பட்டிருந்தது. ஏனெனில் மருத்துவமனை நிர்வாகமும் புரூஸ் லீ மரணிப்பதையே ஆவலுடன் எதிர் பார்த்தது.
எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே உலகின் அபாரத் திறமையாளன் வீழ்ந்தான். புரூஸ் லீ இறந்த சில நாட்களிலேயே அவருடைய மனைவி அமெரிக்காவுக்குப் பறந்தார்.
ஒரு மோசமான மனைவியின் துரோகத்தால் தூய வீரன் சிதைக்கப்பட்ட வரலாறு இதுதான்!

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

இலங்கை யுவதியின் மனிதாபிமான செயற்பாடுக்கு நியூசிலாந்தில் பாராட்டு

நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரின் செயற்பாடு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. 23 வயதான விதுஜனா விக்னேஸ்வரன் என்ற யுவதி தலைமுடியை, தானமாக 
வழங்கியுள்ளார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த அரிய செயற்பாட்டை விதுஜனா செய்துள்ளார். அகதி அந்தஸ்து கோரி நியூசிலாந்தில் குடியேறி விதுஜனா, பட்டப்படிப்பை
 படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இளம் வயதில் தனது நீண்ட தலைமுடியை தானமாக வழங்கியுள்ளார். சமகாலத்தில் பொறுப்பற்ற ரீதியில் கலாச்சார சீரழிவில் இளைய தலைமுறை சிக்கி வருகிறது.
இவ்வாறான நிலையில் விதுஜனாவின் செயற்பாடு பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 4 செப்டம்பர், 2017

புலம்பெயர் மாணவி.ஜெ.அபிராமி சிறுவர் இனிய வாழ்வு இல்லத்திற்கு அன்பளிப்பு

 இலண்டன் புலம்பெயர் 13 வயதான மாணவி அபிராமி ஜெகதீசன் 
சிறிது சிறிதாக 
 சேமித்த ஐம்பது ஆயிரம்(50000.00) ரூபாவை ஈழத்து வன்னியின் மாற்றுத் திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு 
இல்லத்திற்கு அளித்தார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அபிராமி அண்மையில் தாயகம் வந்தபோது தனது அன்பினை இவ்விதம் வெளிப்படுத்தினார். இப்பணத்தை அவர் சில மாதங்களாக சிறுகச்சிறுக சேமித்தமை
 குறிப்பிடத்தக்கது
இளம் வயதில் இவர் காருண்ணியம் பாராட்டுக்குரியது போர் காலத்தில் புனிதர்களாக வாழ்ந்த இல்லத்துப்பிள்ளைகள்
இப்போது மிக கஸ்ரநிலையில் வாழ்வது ஏற்றுக்கொள்ளப்பாடாத ஒன்று, அதையறிந்த இந்தச்சிறுமியின்செயல் பாரட்டுக்கு உரியது மட்டுமல்ல இந்தச் செய்தியை பார்பவர்கள் இல்லத்து பிள்ளைகளுக்கு நல்லதை செய்ய துண்டுதலானதாகும்  இவர்பணி வாழ்க
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிராங்க்பேர்ட் நகரின் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் அண்மையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு இன்றைய தினம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதன் பொருட்டு அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகத் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குண்டானது 2ம் உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்து விமானப் படையினரால் வீசப்பட்டதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 26 ஆகஸ்ட், 2017

ஹார்வி புயல்' அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்துமாம்

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளதால் அது கரையை கடக்கும் போது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உருவாயுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலானது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ்
 கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும். மேலும் 97 செ.மீ வரை மழை பெய்யும். இந்த புயலால் 12 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும் எனவும் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பேஸ்புக் திடீரென பல நாடுகளில் திடீர் முடக்கம்?

சமூகவலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் திடீரென செயற்படாத காரணத்தால் பல நாடுகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த பிரச்சினை குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>