நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 18 டிசம்பர், 2017

புதிய முயற்சியில் சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் பி.எம்.டபிள்யூ!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய 
தொழில்முயற்சியானது 
ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என 
எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை முன்னெடுப்பதற்கு, அங்கு செலவுகள் குறைவு என்பதே பிரதான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த திட்டமானது அடுத்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக