நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 15 ஜூன், 2013

சனத்தொகை 1100 கோடியாக உயரும்: ஐ.நா ???


கி.பி. 8-ம் நூற்றாண்டில் 50 லட்சம் மக்களும் 1805-ம் ஆண்டு 100 மக்கள் மட்டுமே உலகில் வாழ்ந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி 2011-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 700 கோடி என தெரிய வந்தது.
எனினும் 2100-ல் உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும் என வாஷிங்டன் பல்கலைக்கழக புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மக்கள் தொகை உயர்விற்கு ஏற்கனவே கணிக்கப்பட்டவாறு ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை உற்பத்தி வீழ்ச்சியடையாததே காரணம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தற்போது 110 கோடியாக உள்ள ஆப்பிரிக்க மக்கள் தொகை 2100-ம் ஆண்டு 420 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதைப் போன்ற மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆப்பிரிக்க பெண்களுக்கு கல்வியறிவை ஏற்படுத்த வேண்டும். குடும்ப கட்டுப்பாட்டை கட்டாயமாக்க வேண்டும்.
பெருகி வரும் மக்கள் தொகையினால் பெரிய நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகரிக்கும். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்படையும் அபாயம் அதிகம் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
2100-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 900 கோடியில் இருந்து ஆயிரத்து 300 கோடிக்கு இடைப்பட்ட நிலையில் ஆயிரத்து நூறு கோடிக்கு நெருக்கமாக இருக்கும் என பேராசிரியர் ஆட்ரியன் ராப்ட்டெரி தலைமையிலான அந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக