நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 13 ஜூன், 2013

லண்டனில் காணாமல் போன இந்திய பெண்


இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் இமான் ஷா பள்ளி விடுமுறையின் போது தனது குடும்பத்தினருடன் லண்டன் வந்திருந்தார். இவர் கடந்த 10ம் திகதி நாடு திரும்புவதாக இருந்தது.
ஆனால் கடந்த 10ம் திகதி லண்டன் ஆக்ஸ்போர்ட் தெருவில் தாயாருடன் ஷாப்பிங் சென்ற அந்தப் பெண் திடீரென காணாமல் போயுள்ள நிலையில் பெற்றோர் பொலிசில் மகள் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பொலிசாரின் விசாரணையில் அவர் காணாமல் போன போது கையில் பணம் மட்டுமே எடுத்துச் சென்றார் எனவும் கையில் செல்போன் வைத்திருக்கவில்லை எனவும் தெரிய வந்தது.
இமான் ஷா தங்கியிருந்த ஓட்டலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இமானின் தந்தை தன்வீர் ஷா, இந்தியாவில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். தனது மகள் காணாமல் போவதற்கு எந்த காரணமும் இல்லை.
அத்துடன் சிறப்பாக தேர்வு எழுதிய அவர் பல்கலைக்கழகத்தில் சேர உற்சாகமாக தயாராகி வந்ததாகவும் தன்வீர் ஷா கூறினார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக