அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இரத்மலானை விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைவதற்கு முயன்ற ஒருவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிம்புலனிலுள்ள அந்திட்டிய வாவியின் ஊடாகவே குறித்த சந்தேகநபர் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில் நுழைவதற்கு முயன்றுள்ளார்.
இதன்போதே குறித்த நபரை விமானப்படையினர் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக அவரை கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படைத்துள்ளனர்.
சந்தேகநபரை பொலிஸார் கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போது அவரை 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அவரை மனநல வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அநுராதபுரம் இராணுவ விமான நிலையம் என்பன விடுதலைப் புலிகளின் துல்லியமான வேவு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக தாக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக