நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 16 ஜூன், 2013

உயிருக்கு போராடும் கவிஞர் வாலி -


 
அதிர்ச்சியில் திரையுலகம் 'கண்ணதாசனுக்குப் பின்  இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி. 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு அவசர‌ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை அவர் தொடர்ந்து சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் ஆவார். ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி ஆறாத் துயரும் அடைந்துள்ளனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அதிர்ச்சியில் திரையுலகம்
 


'கண்ணதாசனுக்குப் பின்  இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி. 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு அவசர‌ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை அவர் தொடர்ந்து சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் ஆவார். ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி ஆறாத் துயரும் அடைந்துள்ளனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக