நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 20 ஜூன், 2013

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3-குற்றவாளிகளின்


டொரண்டோவில் இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.இந்த சம்பவம் சென்ற ஏப்ரல் 5ஆம் திகதி நடந்தது என்றும் தற்போது குற்றவாளிகளின் புகைப்படம் கிடைத்துள்ளதாகவும் டொரண்டோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதிகாலை மூன்று மணியளவில் டொரண்டோவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் Gloucester Street, east of Yonge Street, வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த மூன்று மர்ம நபர்கள், அந்த பெண்ணை குறித்து மோசமான கமெண்டுகள் கூறியபடி வந்துள்ளனர்.
பின்னர் திடீரென அவரை தூக்கிக் கொண்டு Norman Jewison Park அருகேயுள்ள மறைவான இடத்தில் மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மாயமாக மறைந்து விட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய அடையாளத்தை அடுத்து டொரண்டோ போலீஸார் குற்றவாளிகள் மூன்று பேர்களில் இரண்டு நபர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
முதல் குற்றவாளி சுமார் 30 வயதுடையவன் என்றும், சுமாரான உடலமைப்பும், அடர்ந்த பிரெளன் நிற முடியும், டார்க் கலரில் பேண்ட்டும், டி சர்ட்டும் அணிந்திருந்தான்.
இரண்டாம் குற்றவாளி சுமார் 20 வயதுடையவன் என்றும், ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்துடனும், ஒல்லியான உடலமைப்பை உடைய இவன், கிரே கலரில் உடை அணிந்திருந்தான்.
மூன்றாம் குற்றவாளி 20வயதுடையவன் என்றும், ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்தில் சுமாரான உடலமைப்பை கொண்டவன் என்றும், டார்க் நிற உடையணிந்து அதற்கு மேலே கோட் அணிந்திருப்பான் என்றும் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே 416-808-7474 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக