நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 18 ஜூன், 2013

காட்டுத் தீ; சிங்கப்பூர், மலேஷியாவில் புகை சூழ


 வரலாறு காணா அலவு சுமத்ரா காடுகளில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இந்த காட்டுத் தீயால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கடும் புகை சூழ்ந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட பனிமூட்டம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள காடுகளில் திடேரென ஏற்பட்ட தீயால் பெரும் காடுகள் பற்றி எரிகின்றன.
இதனால் இரவு பகலாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீயினால் ஏற்பட்ட புகை, சிங்கப்பூரை சூழ்ந்துள்ளது. இந்த புகை மண்டலம் மலேசியாவிலும் பரவி வருகிறது. கடும் புகை மண்டலத்தால் மக்கள் கண் எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காட்டு தீ தொடர்ந்து எரிவதால் ஏற்படும் புகையினால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக