நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 21 ஜூன், 2013

பெண்னை நாய், மற்றும் பாம்புகளுடன் பூட்டி வைத்து ??


அமெரிக்காவிள்ள ஒஹியோ நகரில் வீடொன்றில் மனநிலை குன்றிய தாயையும் அவரின் பிள்ளையையும் சரியில்லாத  பாம்புகள், நாய்களுடன் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்களை இரண்டு வருடங்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளர்.
எனினும் பாதிப்படைந்த பெண்ணின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை.
பாம்பு, நாயுடன் தங்கியிருக்கும் போது குழந்தையுடன் தாயை சேர விடாமல் தடுத்தனர். எனினுமம் தனது குழந்தைக்கு ரகசியமாக உணவு, தண்ணீர் கொடுத்திருக்கிறார் அந்த தாய்.
பலமுறை பெண்ணை பாம்புகளும், நாயும் கடித்திருக்கிறது. இதற்காக அந்த பெண்ணுக்கு வலி நிவாரண மாத்திரை கொடுத்திருக்கிறார்கள்.
அந்த பெண் எப்படியோ வெளியே தப்பி வந்தது இனிப்பு பொருட்களை திருடியதாக பொலிஸில் சிக்கினார். அப்போது அவர் ‘என்னை ஜெயிலுக்கு அனுப்புங்கள். வீட்டிற்கு போக விரும்பவில்லை’ என்று பொலிஸாரிடம் கெஞ்சியிருக்கிறார்.
ஒன்றாக தங்கியிருக்கும் நண்பர்களே தன்னையும், குழந்தையையும் சிறைவைத்து அளித்த கொடுமைகளை அம்பலப்படுத்தினார்.
இந்த கொடுமை தொடர்பாக 26 வயது Jordie Callahan என்ற பெண்ணும், 31 வயது Jessica Hunt  மற்றும் 33 வயது Daniel Brown ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பொலிஸார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக