நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 13 ஜூன், 2013

கொடூர செயலால் பாதுகாப்பு இல்லத்தில் 11 முதியவர்கள்


ஸ்பெயின் நாட்டில் உள்ள ஜிரோனா என்ற இடத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஆதரவற்ற நூற்றுக்கணக்கான முதியவர்கள் வசித்து வந்தனர்.
இவர்களில் சிலர் திடீர் திடீரென இறந்தனர். அவர்கள் ஏன் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள்? என்று நடந்த ஆய்வில் அவர்கள் இயற்கையாக சாகவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது.
அதன் பின்பு அவர்களை அந்த இல்லத்தின் காவலாளியாக இருந்தவரே கொலை செய்திருந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அந்த காவலாளி கைது செய்யப்பட்டு அவரை விசாரித்த போது, முதியவர்களின் தொல்லை தாங்காமல் அவர்களை கொலை செய்ததாக கூறினார்.
அவர்களில் பலர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டதோடு, 3 பேருக்கு அதிக அளவில் மதுவை குடிக்க வைத்து அவர் கொலை செய்திருந்தார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக