நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 14 ஜூன், 2013

இலங்கை தமிழரின் தகவல் மரணத்திற்கு என்ன காரணம்?

 
அயர்லாந்தில் பல் மருத்துவராக வேலை பார்த்த இந்திய பெண்ணான சவீதா, 17 வார கருவை சுமந்துக் கொண்டிருந்தார்.
அவரது இரத்தத்தில் தொற்று நோய் கிருமிகள் இருப்பதால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவரது கருவை கலைக்க வேண்டி கால்வே மருத்துவமனையை நாடினார்.
கரு உயிருடன் இருப்பதால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான இங்கு கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கால்வே மருத்துவமனை அதிகாரிகள் கைவிரித்து விட்டனர்.
கருக்கலைக்க மறுக்கப்பட்ட நிலையில் சவீதா உயிரிழந்தார். இதனையடுத்து மனைவி இறப்பிற்கு காரணம் மருத்துவர்களே என்று அவரது கணவர் ஹலப்பனாவர் வழக்கு தொடர்ந்து அங்கு விசாரணை நடை பெற்று வருகிறது.
இவ்விசாரணைக் குழுவின் தலைவராக இலங்கை தமிழரும், புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவருமான சபாரத்தினம் அருள்குமரன் உள்ளார். பிரச்சினைக்குரிய இவ்விசாரணை அறிக்கையை அவர் விரைவில் அளிக்கவுள்ளார்.
இந்நிலையில், சவீதா கருவை தவறாக சுமந்த நிலையில் கால்வே மருத்துவர்கள் உடனடியாக கருக்கலைப்பு செய்து இருக்கவேண்டும்.
இதனால் சவீதாவிற்கோ அல்லது பிறக்கப்படாத குழந்தைக்கோ எந்த பாதிப்பும் இருந்து இருக்காது. ஆகையால் மருத்துவர்கள் சவீதாவை காப்பாற்ற தவறி விட்டனர் என்று குழுத்தலைவர் சபாரத்தினம் அருள்குமரன் தெரிவித்துள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக