நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 24 நவம்பர், 2019

நடைப்பயிற்சிக்கு நாயுடன் சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

காட்டுப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்றகொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை நாய்கள் கடித்து கொன்றுள்ளதாக அவரது கணவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.பாரிஸிலில் ரெட்ஸ் வனப்பகுதியில் எலிசா பிலாஸ்கி என்ற 29 வயதுடைய 6 மாத 
கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.அப்போது சில நாய்கள் அவரை சூழ்ந்து அவரை தாக்க முற்படுவதாக கணவருக்கு 
தொலைப்பேசி வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார். அந்நிலையில், விமான நிலையத்தில் தொழில்புரிந்து வந்த அவரின் கணவர் சுமார் 45 நிமிடங்களின் பின்னரே சம்பவம் இடம்பெற்ற இடத்தை அடைந்துள்ளார்.இதன்போது, பெரிய அதிர்ச்சியொன்று அவரிற்கு காத்திருந்தது. 
நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த தன் மனைவியை
 பார்த்த அவர் கதறி அழுதுள்ளார். பின்னர் பொலிஸாருக்கு தகவலும் வழங்கியுள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த 
பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் பிலாஸ்கியை கடித்து குதறியது, அவரின் வளர்ப்பு நாயா? அல்லது காட்டில் சுற்றித்திறிந்த தெருநாய்களா என கண்டறிய டீ.என்.ஏ மாதிரிகளை பொலிஸார் பரிசோதிக்க அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில், கர்ப்பிணி மனைவியை இழப்பானது, கணவனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக