நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 5 ஜூன், 2019

தாய், மகள் பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும்
 நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
 அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.24 கோடி) வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மாசுபாட்டை தடுக்க அரசு எந்தவித பாதுகாப்
பு நடவடிக்கையும் 
எடுக்கவில்லை, முக்கியமாக கடந்த டிசம்பர் 2016 ல் பாரிஸ் மிகவும் அதிகமான மாசுபாட்டை சந்தித்த போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும்
 அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, தங்கள் கட்சிக்காரர்கள் இருவருமே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் அப்பகுதியிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் பகுதிக்கு
 இடம்பெயர்ந்ததிலிருந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரான்ஸ் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை
 எனவும் வாதிட்டார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக