நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 16 டிசம்பர், 2013

லஞ்சத்தில் மடங்கும் நாராயண் சாய் வழக்கு: குற்றவாளிகள் கைது

 பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் மீதான வழக்கை பலவீனப்படுத்த வலியுறுத்தி லஞ்சம் கொடுக்க வந்த அவரது ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் வழக்கை வவிசாரித்து வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வந்த அவரின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யயப்பட்டனர். அவர்களிமிடருந்த 5 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் தங்கள் தகவலில், இப்பணத்தை அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும், நீதித்துறையை சார்ந்தவர்களுக்கும் வழங்க முன்வந்ததாக குறிப்பிட்டுள்ளது.
குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரி சி.கே.கும்பானியும் நாராயண் சாயின் ஆதரவாளர்களுடன் கைது செய்யட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

நாராயண் சாயின் கூட்டாளியான உதய் சாங்காணியிடமிருந்து ரூபாய் 1 கோடியும், சூரத்திலுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் படேலிடமிருந்து ரூபாய் 4 கோடியும் கைப்பற்றப்பட்டதாக குற்றப்பிரிவு துணை ஆணையர் ஷோபா புட்டாடா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக