நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விண்ணில் ஏவியது மிகவும் செலவு குறைந்த ராக்கெட்டை


 
ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது.
எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய

தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது.
37 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன ராக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது

தொலைநோக்கியை எடுத்துச்சென்றது. பின்னர் பூமியின் மேலே சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் அந்த டெலஸ்கோப்பை விட்டு ராக்கெட் பிரிந்தது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விடப்பட்டுள்ள இந்த ஸ்பிரிண்ட்-ஏ-

தொலைநோக்கியானது வீனஸ், மார்ஸ், ஜூபிடர் கோள்கள் பற்றி ஆராய்ந்து படம் பிடித்து அனுப்பும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய தகவல்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளி பற்றிய அறிய தகவல்களை தரும் என்று நம்பப்படுகிறது.

முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளை காட்டிலும் பாதியளவு எடையுள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த எப்சிலான் ராக்கெட்டை அனுப்ப 8 விஞ்ஞானிகளே மட்டுமே தேவைப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பேசும் ரோபோக்களை சர்வதேச விண்வெளிக்கூடத்திற்கு அனுப்பும் முயற்சியை ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா எடுத்து வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக