நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

” முன்னாள் பிரதமருக்கு எதிராகடோனி திரும்பி போ”


தாய்லாந்து சென்றுள்ள இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இங்கிலாந்து- தாய்லாந்து நாடுகளுக்கு இடையே கடந்த 2006ம் ஆண்டு முதல் பல விடயங்களில் பிரச்னை நிலவுகிறது.
இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை ஏற்படுத்துவதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சமாதான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கலந்து கொண்டு பேசினார்.
இதற்காக தாய்லாந்து அரசிடம் இருந்து 4 லட்சம் அமெரிக்க டொலர் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், தாய்லாந்தில் நடைபெற்ற கருத்தரங்கை புறக்கணித்தும் மக்கள் ஏராளமானோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“டோனி திரும்பி போ” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பிளேருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஆனால் தாய்லாந்து அரசிடம் எந்த பணமும் வாங்கவில்லை என்று பிளேர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தாய்லாந்து அரசு, டோனி பிளேருக்கு போக்குவரத்து, தங்கும் இடம் உள்ளிட்ட செலவு மட்டும்தான் செய்யப்பட்டது, உரை நிகழ்த்த பணம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.{புகைப்படங்கள்},








 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக