நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வாஷிங்மிஷினில் மறைந்திருந்த இரு குழந்தைகள் பலி


சீனாவின், கியோசி நகரிலுள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகள், வாஷிங்மிஷினில் ஒளிந்த கொண்டிருந்தபோது மூச்சு திணறி இறந்தனர்.

வீ்ட்டில் இரண்டு மற்றும் மூன்று வயது கொண்ட இரு ச‌கோதரிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
தாய் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருக்க, தந்தை இசையை ரசித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், குழந்தைகள் இருவரும் திறந்திருந்த வாஷிங்மிஷினுக்குள் புகுந்து, மூடிக் கொண்டனர். அப்போது ஏற்பட்ட மூச்சு திணறலால் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இக்குழந்தைகளின் ஒரு வயது தம்பி இந்த விபத்தில் இருந்து தப்பினான்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக