நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 2 செப்டம்பர், 2013

முன்னாள் அமைச்சர் வீட்டு நாய்கள் விஷம் வைத்து கொலை


 பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் விலையுயர்ந்த மூன்று நாய்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளன.
இது பற்றி அவரது இளைய சகோதரர் காலித் மாலிக் கூறும்போது,
சமீபத்தில்தான் இந்த நாய்கள் 36 லட்சம் ரூபாய் செலவில்  ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டன.
பஞ்சாப் மாகாணம் சியால்கோட்டிலுள்ள அண்ணனின் வீட்டில் வெள்ளிக்கிழமை அவை இறந்து கிடந்தன. அவற்றுக்கு யாரோ விஷம் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
காவல்துறையினர் சிறப்புப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக