நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 25 செப்டம்பர், 2013

சீனாவில் சூறாவளி : 25 பேர் பலி


 நேற்று சீனாவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 23 பேர் பலியானார்கள்.
சீனாவின் ஹாங்காங் அருகே உள்ள தெற்கு பகுதி மாகாணமான குவாங்டோங்கில் நேற்று 'யுசாகி' என்ற சூறாவளி தாக்கியது. 180 கி.மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட இந்த சூறாவளி தாக்கியதில் அப்பகுதியில் 7100  வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் அடியோடு சாய்ந்தன. ரோடுகளில் நின்ற கார்கள் உருண்டன.

இந்த இடிபாடுகளில் சிக்கியும், வெள்ள நீரில் மூழ்கியும், காற்றில் தூக்கி வீசப்பட்ட பொருட்கள் தாக்கியதிலும் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளிக்கு 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குவாங்டோங் மாகாணத்தில் உள்ள குவாங்ஜூ , ஷென்சென் மற்றும் ஹாங்காங் பகுதிகளுக்கு செல்லும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் தரைவழி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக