நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 5 செப்டம்பர், 2013

10 வருடங்களாக பாலியல் மூன்று பெண்களை கடத்தி கொடுமைகள் ?


மூன்று பெண்களைக் கடத்திச் சென்று 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்சிறை வைத்து பாலியல் கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ என்ற நபர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணச் சிறையில் தீவிர கண்காணிப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஏரியல் காஸ்ட்ரோ, செவ்வாய்க்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2002 முதல் 2004 வரை 3 பெண்களைக் கடத்திச் சென்று வீட்டுக்குள் சிறை வைத்து, ஏரியல் காஸ்ட்ரோ மிகக் கொடுமையாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்த ஒரு பெண் அக்கம்பத்தினரின் உதவியோடு காவல்துறைக்குச் சென்ற பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கடத்தப்பட்ட 3 பெண்களையும், அதில் ஒருவருக்குப் பிறந்த பெண் குழந்தையையும் காவல்துறையினர் மீட்டு ஏரியல் காஸ்ட்ரோவை கைது செய்தனர்.

இதையடுத்து, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருந்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக