நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 10 அக்டோபர், 2013

2 சுரங்க தொழிலாளர்கள் உயிருடன் 10 நாள்களுக்குப் பின்பு மீட்பு


 
சீனாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி சீனாவில் உள்ள பென்யாங் நகர நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போனவர்களில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிருடன் மீட்டனர்.

அவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பதாகவும். உயிருக்கு ஆபத்து உண்டாகும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ளூர் மருத்துவ மனையில் அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.{புகைப்படங்கள்,}





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக