நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 7 ஜூலை, 2017

திடீர் அதிகரிப்பு யூரோவுக்கு எதிராக பிரித்தானிய பவுண்டின் பெறுமதி

யூரோவுக்கு எதிராக பிரித்தானிய பவுண்டின் பெறுமதி இன்றைய தினம் அதிகபட்ச உயர்வை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கை நடவடிக்கைகளின் மீதான புதிய நெருக்கடிக்கு மத்தியில் பவுண்ட் உயர்வை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜுன் 20ம் திகதிக்கு பின்னர் யூரோவுக்கு எதிராக பவுண்ட அதிகபட்ச பெறுமதியை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்ட கருத்துக்களினால் யூரோவின் பெறுமதி பாதிக்கப்பட்டு, பவுண்ட் வலுவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று சில குழப்பங்களை எதிர்கொண்ட பிறகு, இன்று காலை ஒரு பவுண்டின் பெறுமதி சுமார் 1.1415 யூராவாக பதிவாகியுள்ளது.
தற்போது பவுண்டின் பெறுமதி 1.1412 யூரோவாக உள்ளது. நேற்றுடன் ஒப்பிடும் போது 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
முந்தைய ப்ரெக்ஸிட் பரிமாற்றத்தின் போது பவுண்டின் பெறுமதி 1.1389 யூரோவாக காணப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக