நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஓமானில் இருக்கும் இலங்கை பெண் பாரிய மனித கடத்தலில் ஈடுபட்டுவந்தார்

ஓமானில் உள்ள இலங்கை பெண் ஒருவர், பாரிய மனித கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளார்.
இந்திய உத்தர பிரதேசத்தில் உள்ள காவல்துறையினர், பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு, பாரிய மனித கடத்தல் தொடர்பை 
கண்டுபிடித்துள்ளனர்.
இதன்மூலம், ஓமன், கட்டார் போன்ற வளைகுடா நாடுகளில் நல்ல வேதனத்துடன் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 24 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற பகுதிகளான பஞ்சாப், கோவா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து சென்றவர்கள்.
அதேநேரம் இலங்கை, நேபாளம், பங்காளதேஷ் , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக