நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 19 செப்டம்பர், 2015

செப்டம்பர் 28-ம் திகதி உலக அழிவு என்கிறாா்கள் ரத்த சிவப்பில் நிலா .!!

அமெரிக்கர்கள் கூறுகிறர்கள் ? ரத்த சிவப்பில் நிலா தோன்ற அறிவியல் ரீதியான காரணத்தை எடுத்துரைத்தும், அதில் நம்பிக்கையில்லாமல், உலக அழிவுக்கான அறிகுறிகள் பல தோன்றியுள்ளன என ஆணித்தரமாக சில அமெரிக்கர்கள் இன்னும் நம்பி வருகின்றனர். உலக அழிவு நெருங்குகிறது! 
அமெரிக்காவின் 
உட்டா மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட நம்பிக்கைவாதிகள் பலரும், வரும் செப்டம்பர் 28-ம் தேதி தங்கள் பகுதியில் தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலா, விண்கற்கள் பூமி மீது விழக் காரணமாக அமைந்துவிடும் என தீவிரமாக நம்புகின்றனர்.
மோர்மோன்’ சர்ச் வழியை பின்பற்றுபவர்களில் பலர், அழிவின்போது தேவைப்படுமே.., என உணவுப்பொருட்கள் பலவற்றையும் இப்போதே வாங்கிக் குவித்தும் வருகின்றனர். உலக அழிவைப் பற்றி இவர்களின் நம்பிக்கைக்குரிய பிரபல எழுத்தாளரான ஜீலி ரோ என்பவர் எழுதிய புத்தகங்களின் குறிப்புகளைக் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளி தொடர்பான ஆராய்சியாளர்கள் செப்டம்பர் 28-ம் திகதி தோன்றப்போகும் ‘ரத்த சிவப்பு’ நிலவால் அழிவு எதுவும் ஏற்படப் போவதில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளனர். நாசாவும் விண்கற்கள் விழும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.!

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக