நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 26 டிசம்பர், 2016

தமிழர் ஒருவர்பாரிஸ் நகரில் கத்திக்குத்து பலி!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தமிழகம் கும்பகோணத்தை சேர்ந்த 26 வயதான மணிமாறன் என்பவரே இவ்வாறு படுகொலை 
செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரை பார்ப்பதற்காக பாரிஸ் வாகிரார்ட் மெட்ரோ புகையிரத நிலையத்தை வந்தடைந்த மணிமாறனை, இனந்தெரியாத நபர்கள் கொடூரமான முறையில் கத்தியால்
 குத்தியுள்ளனர்.
எனினும், படுகாயமடைந்த மணிமாறன் தனது நண்பர் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். இந்நிலையில், வீட்டு அழைப்பு மணியை அழுத்திய மணிமாறன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டு கதவை திறந்து பார்த்த நண்பர், மணிமாறன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் 
வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக