நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பிரித்தானியாவிலுள்ள பெட்போர்ட் என்னும் இடத்தில் உள்ள யார்ல் வூட் தடுப்பு முகாமை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்று (03/12/16) யார்ல் வூட் தடுப்பு முகாமை சுற்றி மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Movement for justice என்னும் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற தமிழர் அமைப்புகளும் தமது ஆதரவை வழங்கியது.
அகதிகளின் பிரச்சனைகளுக்கு எதிராக, அகதிகள் தொடர்பான பிரித்தானியா அரசின் கடும் போக்குவாதத்திற்கு எதிராக அகதிகளே போராட வேண்டும் என்ற தொனிப் பொருளில் இயங்கும் “அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு” இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியதை 
காணக்கூடியதாகவிருந்தது.
மேலும் இன,மத,மொழி வேற்றுமை பாராமல் பல்லின மக்களும் இதில் கலந்து கொண்டமை சிறப்பானதொரு
 அம்சமாகும்
தடுப்பு முகாம்களை மூடு, அகதிகளும் மனிதர்களே, அகதிகளை விடுதலை செய், அகதிகளுக்கான உரிமைகளை வழங்கு, அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்து, இனவெறியை நிறுத்து , நிறவெறியை நிறுத்து போன்ற கோஷங்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டன. கடந்த மாதம் அகதிகளுக்ககான உரிமைகள் அமைப்பு லண்டனில் அகதிகளின் உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் ஒன்றையும் நடாத்தியது இங்கு 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக