நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 25 ஜனவரி, 2019

திடீர் உடல்நலக் குறைவு கனடாவில் விமானம் ஏறிய பயணிகளுக்கு

கனடாவில் விமானம் ஏறிய சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடா நாட்டின் கியூபெக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல ஏர் டிரான்ஸாட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை  தயாராக இருந்தது. பயணிகள் ஒருவர்பின் ஒருவராக வநது தங்களது...

ஆடை அலங்கார துறையில்உலகில் பிரபலமான இலங்கை தமிழர்

உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இலங்கை தமிழரான இளைஞனும்  உள்ளடக்கப்பட்டுள்ளார். இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே ஆடை அலங்கார துறையில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 20 வயதான அவர், லண்டன், பாரிஸ், மிலான் மற்றும் நியூயோர்க் உட்பட உலகில் புகழ்பெற்ற ஆடை அலங்கார கண்காட்சிகளில் முக்கியமான பிரபலமாக திகழ்ந்து வருகிறார். அவரது உடல் நிறமே இதற்கு பிரதான காரணம் எனவும்...

மெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து 66 பேர் பலி

மெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 66 பேர் உடல் கருகி பலியான சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லஹீலிப்பன் நகரிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு பெற்றோல் கொண்டு செல்லும் வழியில் சட்டவிரோதமாக துளையிட்டு பெற்றோலை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக குழாய் வெடித்து சிதறியதில் 66 பேர் உடல் கருகி பலியாகினர்....

திங்கள், 14 ஜனவரி, 2019

புதிய சட்டங்கள் கனடாவில் 2019 முதல் அறிமுகம்

கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சட்டங்களுக்கும் கனடா அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள். இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அடுத்து வாகனம் ஓட்டும்...

சனி, 12 ஜனவரி, 2019

இரண்டடுக்கு பேருந்து கனடாவில் விபத்து மூவர் பலி 23 பேர் காயம்

கனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். ஒட்டாவா பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.. பேருந்தின் மேல் தளம் சேதமடைந்தமையால், மேல் தளத்தில் இருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு பேருந்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்துள்ளனர். இதனால் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்களே...

செவ்வாய், 8 ஜனவரி, 2019

தமிழர் திருவிழா டோட்முண்ட் தமிழர் அரங்கில் 16.01.19

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் அனைத்து மதத்தவருக்கும் முக்கியம் கொடுத்து பொங்கள்விழாவில் மும்மத இணைப்பாக பெங்கல்விழா சிறப்பாக நடைபெறுகின்றது, அந்த வகையில் எந்தமதமாக இருந்தாலும் தமிழ் ஈழத்து மக்களாகிய எமக்கு பெபங்கள்விழா என்பது இணை வான விழாவாகும் அந்த வரிசையில் வருகின்ற 16.01.2019 அன்று தமிழர் அரங்கில் பொங்கல்விழாவவை சிறவப்பித்து நிற்போம் என அழைக்கின்றார்கள் தமிழர் அரங்கின் உரிமையாளர்கள்  திரு திருமதி சபேசன் குழுவினர் இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்...

திங்கள், 7 ஜனவரி, 2019

மீண்டும் இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு முன்னர் நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவு ரிச்ட்டரில்...

வெள்ளி, 4 ஜனவரி, 2019

பிரேசிலில் இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை

கர்பப்பை தானத்தின் மூலம் பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இறந்த பெண்ணில் கர்ப்பப்பையில் இருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை இது என்பது  குறிப்பிடத்தக்கது! இறந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தை பெற்றெடுக்கப்பட்டிருப்பது பெரிய சாதனை என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் கர்ப்பம் தரிக்க முடியாத பல பெண்களுக்கும் இறந்தவர்களிடமிருந்து கர்ப்ப்பையினை தானமாக பெற்று குழந்தையினை பெற்றெடுக்கலாம் என...

புத்தாண்டில்.01.01.19 அன்று பிறந்த முதல் குழந்தை

2019 ஆம் ஆண்டின் முதல் குழந்தை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. புத்தாண்டு பிறந்த ஒரே நொடியில் அதாவது 12.00.01 மணியில் அயர்லாந்து நாட்டில் உள்ள டிரோஹ்டே என்ற நகரத்தில் பிறந்த குழந்தை தான் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக  அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டில் உள்ள டிரோஹ்டே என்ற நகரத்தில் மைக்கேல் மாண்டாஹ் மற்றும் சிமன் காக்ஸ் ஆகிய தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தப் பெண் குழந்தை தான் இந்த ஆண்டின் முதல் குழந்தை என்றும்,...