நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 25 ஜனவரி, 2019

மெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து 66 பேர் பலி

மெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 66 பேர் உடல் கருகி பலியான சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லஹீலிப்பன் நகரிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு பெற்றோல் கொண்டு செல்லும் வழியில் சட்டவிரோதமாக துளையிட்டு பெற்றோலை பிடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குழாய் வெடித்து சிதறியதில் 66 பேர் உடல் கருகி பலியாகினர். 76 பேர் படுகாயமடைந்தனர்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுபவர்களே பெற்றோலையும் திருடி விற்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஆண்ட்ரஸ் மனுவெல் ஒப்ராடார் பெட்ரோல் திருட்டை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக