நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 22 அக்டோபர், 2021

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன சிறுமியைக் கண்டுபிடித்து தருவோருக்கு ஒரு மில்லியன் டொலர்

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன 4 வயதுச் சிறுமியைக் கண்டுபிடிக்கத் தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வெகுமதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் பொழுதுபோக்கிற்காக முகாமில் தங்கும் இடத்திலிருந்து கிளியோ ஸ்மித் ( Cleo Smith) என்ற
 அந்தச் சிறுமி
சென்ற சனிக்கிழமை (16) கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சிறுமி காணாமல்போன அன்று, கிளியோவின் ( Cleo Smith) தாயார், அன்று காலை 6 மணிக்கு எழுந்தபோது, அவர்கள் தங்கியிருந்த கூடாரம் திறந்திருந்தபோதுதான், கிளியோவைக் காணவில்லை என்பதை அவர்
 உணர்ந்தார்.
இந்நிலையில் சுறுமியை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கிளியோ, கூடாரத்திலிருந்து கடத்தப்பட்டார் என்று நம்புவதாக தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், சிறுமியின் பாதுகாப்புக் குறித்து அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமியை உயிரோடு மீட்கமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக