நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 31 மே, 2016

ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த மூதாட்டி: ஒரு அதிசய சம்பவம்!

வடக்கு ஜேர்மனியில் உள்ள லோயர் சாக்ஸோனி நகருக்கு அருகில் உள்ள Langwedel என்ற பகுதியில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே பகுதியில் உள்ள ரயில் பாதையை 91 வயதான மூதாட்டி ஒருவர் தினமும் கடந்து சென்று வீடு திரும்புவார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூதாட்டி நடந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ’வாக்கிங் ஸ்டிக்’ ஒன்றை ஊன்றிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பாய்ந்து வந்துள்ளது. தண்டவாளத்தின்...

திங்கள், 30 மே, 2016

ஜேர்மனியில் பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது???

ஜேர்மனியில் பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நகரமாக Dresden தெரிவு செய்யப்பட்டுள்ளது. Focus என்ற நாளிதழ் ஜேர்மனியில் உள்ள 77 நகரங்களில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வருவாய், கல்வித்திறமை, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், சம உரிமை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இதில் எந்த நகரம் அவர்கள் நட்புறவுடன் வாழ்வதற்கு சிறப்பாக உள்ளது என்பது குறித்து  கணக்கெடுப்பு நடத்தியது. இதில் Dresden நகரம் முதலிடத்தில் உள்ளது, இந்நகரில்...

திங்கள், 9 மே, 2016

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்க வைத்தியசாலைகளில்  வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும், நிறுவனம் ஒன்றுடன் குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதன்படி குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு...

சனி, 7 மே, 2016

.பிரான்சில் வதிவிட உரிமை இல்லாத தமிழ‌ர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்?

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் தலைநகரமான  பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று வருகின்றது. முன்னர் வதிவிட உரிமை இல்லாத நபர் ஒருவரை  பொலிசார்  கைது செய்யும் போது அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு வழங்கப்படும் , ஆனால் தற்போது வதிவிட உரிமை ( விசா) இல்லாமல்  கைது...

செவ்வாய், 3 மே, 2016

கார் ஏறி ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!.

கனடா நாட்டில் தந்தை கார் ஏறி 7 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டாவா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் Cantley என்ற ஒரு சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெற்றோர் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காரில் வெளியே சென்றுருந்த தந்தை வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரது வீடு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், காரை உயரமான இடத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார். சில...

இறுதிச்சடங்குகள் திருமணங்கள் நடக்கக்கூடாது: அதிபரின் அதிரடி உத்தரவு?

வட கொரியா அதிபர் தன்நாட்டு மக்களுக்கு விதித்துள்ள உத்தரவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். வடகொரியா நாட்டின் உயர் தலைவராக இருக்கும் கிம் ஜாங்கின் பதவிப்பிரமாணம் நடைபெறவிருக்கிறது. இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிம்ஜாங் 33 வயதை எட்டியுள்ளதால் இந்த பதவிப்பிரமான நிகழ்ச்சி மே 6 ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறவிருக்கிறது. ஆனால் சரியான திகதி வெளியிடப்படவில்லை, இந்நிலையில்...