நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 17 நவம்பர், 2016

செத்த எலி ஆடைக்குள் ஆடை விற்பனை நிலையத்துக்கு எதிராக யுவதி வழக்கு!.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தான் வாங்­கிய ஆடையில் மடித்து தைத்த பகு­திக்குள் இறந்த எலி­யொன்று கிடந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துடன், வழக்கும் தொடுத்­துள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த கெய்லி பிசெல் எனும் 24 வய­தான இந்த யுவதி, “ஸாரா” எனும் ஸ்பானிய ஆடை விற்­பனை நிறு­வ­ன­மொன்­றி­ட­மி­ருந்து மேற்­படி புதிய ஆடையை வாங்­கி­ய­தாகத் தெரி­வித்­துள்ளார்.
40 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு (சுமார் 6000 ரூபா) வாங்­கப்­பட்ட இந்த ஆடையை சில வாரங்­களின் பின்னர் தனது வேலைத்­த­ளத்­துக்கு அணிந்து சென்­ற­போது அதிக துர்­நாற்றம் ஏற்­பட்­டதாம்.
தனது காலில் ஏதோ உராய்­வதை உணர்ந்த கெய்லி பிசெல், மேற்­படி ஆடையை ஆராய்ந்­த­போது, ஆடையில் மடித்து தைத்த பகு­திக்கு வெளியே எலி­யொன்றின் கால் நீட்­டிக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்­தாராம்.
“தைய­லி­டப்­பட்ட பகு­தியை தொட்­ட­போது, எலி­யொன்றின் கால் தென்­பட்­டது. அப்­போது அதிர்ச்­சி­யினால் நான் உறைந்து போய்­விட்டேன்” என கெய்லி பிசெல் தெரி­வித்­துள்ளார்.
இதை­ய­டுத்து, மேற்­படி நிறு­வ­னத்­திடம் நஷ்ட ஈடு கோரி கெய்லி பிசெல் வழக்குத் தொடுத்­துள்ளார். இது தொடர்­பாக ஸாரா யூ.எஸ்.ஏ. நிறு­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் கூறு­கையில், “இந்த விவ­காரம் குறித்து நிறு­வனம் அறிந்­தி­ருக்­கி­றது.
இது தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­ப­டு­கி­றது. ஸாரா யூ.எஸ்.ஏ. நிறு­வ­ன­மா­னது இறுக்­க­மான சுகாதார மற்றும் பாதுகாப்பு தர நியமங்களை பேணுவதற்கு உறுதி பூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக