நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

கனேடிய பொலிஸாரிடம் 200,000 டொலர் மோசடிசெய்து சரணடைந்த இலங்கை தம்பதியினர்

பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்துள்ளதாக செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
கணவன் – வயது 57, மனைவி வயது – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்.
2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை கடன் பெற்றனர்.
இதே போல 200,000 டொலர்களை புதிதாக விண்ணப்பித்து கடன் பெற்ற நிலையிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் உண்மையான ஆவணங்களை காண்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தார்.
இருவரின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்ட நிலையிலேயே வேறு வழி இல்லாமல் இவர்கள் சரணடைந்தனர்.
பின்ஞ் அவனியூ வேஸ்ட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 24ம் திகதி இடம்பெறவுள்ளது.
5000 டொலர்களுக்கு மேல் மோசடி செய்ததாக 
வழக்கிடப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக