நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 31 ஜனவரி, 2017

பாடசாலையின் வாயிலில் மாணவன் படுகொலை

நேற்று மதியம் 1.00 மணியளவில், பரிஸ் 20 இல், பிரபல பெயார்- லாச்செஸ் மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள, professionnel Charles-de-Gaulle இன் மாணவன் ஒருவர், லிசே வாசலில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளி அங்கிருந்து தப்பியோடியுள்ளான். உடனடியாக அவசரசிகிச்சைப் படையினரும், காவற்துறையினரும் வந்தும், மாணவனைக் காப்பற்றியிருக்க முடியவில்லை.
இது இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட ஒரு தகராற்றினால் நடந்த கொலை எனவும், சந்தேகத்திற்குரிய இருவர், லிசே வாசலில் காணப்பட்டதாகச் சாட்சியங்கள் தெரிவித்ததாகவும், காவற்துறையினரின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கத்திக்குத்திற்கு இலக்காகிய 17 வயது மாணவனின், நெஞ்சு விலாப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. சாவதற்கு முன்னர், தானே கத்தியை வெளியே பிடுங்கி உள்ளார். மேலதிக விசாரணைகள் பரிசின் காவற்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் கொலைக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை எனக், காவற்துறையினரின் விசாரணைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக