நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 28 செப்டம்பர், 2017

குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸ்

அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸும் இணைந்துள்ளது ரெண்ட் கேப் என்னும் ஓன்லைன் வலைதள நிறுவனம் $1,500 வாடகைக்கு எவ்வளவு சதுர அடி கொண்ட அடுக்குமாடி  வீடுகள் உலகின் முக்கிய நகரங்களில் தரப்படுகிறது என்ற ஆய்வை நடத்தியது. இதில் பிரான்ஸின் பாரீஸ் நகரம் 25வது இடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 30m² இடம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தான் கிடைப்பதாக தெரியவந்துள்ளது இந்த பட்டியலில்...

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கத்தியால் மனநல மருத்துவரை குத்திக் கொன்ற நோயாளி

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் அச்சுதா ரெட்டியை நோயாளி ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த அச்சுதா ரெட்டி, அமெரிக்காவில் குடியேறி மனநல மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் நடத்தி வந்த கிளினிக்கில் யோகப் பயிற்சிகள் மூலம் மனநல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் அவர் நோயாளி ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட...

மரக்கறிகள் வீதியில் விற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

பிலிப்பைன்ஸில் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பாடசாலையில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார். பொருளாதார சிக்கலால் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது இதை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரபல நடிகையும், பாடகியுமான ஷரோன் குனெட்டா, சிறுவன் விற்கும்...

புதன், 13 செப்டம்பர், 2017

பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தில் தவகல்கள் திருடிட்டு!

பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஹேக்கர் 44 மில்லியன் மக்களின் தவகல்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் போது பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்களினதும் தகவல் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம்  வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த...

திங்கள், 11 செப்டம்பர், 2017

பேனா மூலம் இலண்டன் பல்கலைக் கழகத்தில் பரீட்சை எழுதத் தடை

இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 800 ஆண்டுகள் பழைமை கொண்டது.  இங்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி  பயில்கின்றனர். இப் பல்கலைக்கழத்தில் பரீட்சைகள் வினாத்தாள்களில் பேனா மூலம் கைகளினால் எழுதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்சமயம் அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மாணவர்களது...

ஈராக்கில் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் பிணமான இளைஞன்

ஈராக்கில் இளைஞரொருவர் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் நொடி பொழுதில் வீதியில் விழுந்து பிணமான சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிசிரிவி வீடியோவில், வீதியில் வரும் தன் நண்பரின் காருக்கு அருகே சென்ற இளைஞன், காருக்குள் இருக்கும் நண்பரிடம் குனிந்து கண்ணாடி வழியாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஏதோ வானத்திலிருந்து இளைஞரின் தலை உச்சியில் பாய, வீதியில் சரிந்த இளைஞர் எந்தவித அசைவில்லாமல் கிடக்கிறார். இதை...

சனி, 9 செப்டம்பர், 2017

இலங்கை தமிழ் இளைஞன் கனடாவில் குத்திக் கொலை

கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர்,  பலனின்றி உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு...

புரூஸ் லீ மனைவியின் துரோகத்தால் மாண்ட வெளியான உண்மைகள!

உலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம்  என்பது இன்னமும் மர்மமாகவே  இருந்து வருகிறது. ஆனாலும் அவரது மரணம் குறித்த இரகசியக் குறிப்புக்கள் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கை மூலம் கசிந்துள்ளது. அதன்படி அவர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்பதே அதன் முக்கிய குறிப்பாகும். இந்தக் காெலைக்கு முக்கியமான காரணம் அவரது மனைவி என்பது தான் பேரதிா்ச்சிக்குரிய விடயமாகும். அன்று...

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

இலங்கை யுவதியின் மனிதாபிமான செயற்பாடுக்கு நியூசிலாந்தில் பாராட்டு

நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரின் செயற்பாடு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. 23 வயதான விதுஜனா விக்னேஸ்வரன் என்ற யுவதி தலைமுடியை, தானமாக  வழங்கியுள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த அரிய செயற்பாட்டை விதுஜனா செய்துள்ளார். அகதி அந்தஸ்து கோரி நியூசிலாந்தில் குடியேறி விதுஜனா, பட்டப்படிப்பை  படித்து வருகிறார். இந்நிலையில் தனது இளம் வயதில் தனது நீண்ட தலைமுடியை தானமாக வழங்கியுள்ளார்....

திங்கள், 4 செப்டம்பர், 2017

புலம்பெயர் மாணவி.ஜெ.அபிராமி சிறுவர் இனிய வாழ்வு இல்லத்திற்கு அன்பளிப்பு

 இலண்டன் புலம்பெயர் 13 வயதான மாணவி அபிராமி ஜெகதீசன்  சிறிது சிறிதாக   சேமித்த ஐம்பது ஆயிரம்(50000.00) ரூபாவை ஈழத்து வன்னியின் மாற்றுத் திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு  இல்லத்திற்கு அளித்தார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அபிராமி அண்மையில் தாயகம் வந்தபோது தனது அன்பினை இவ்விதம் வெளிப்படுத்தினார். இப்பணத்தை அவர் சில மாதங்களாக சிறுகச்சிறுக சேமித்தமை  குறிப்பிடத்தக்கது இளம் வயதில் இவர் காருண்ணியம் பாராட்டுக்குரியது...

பிராங்க்பேர்ட் நகரின் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் அண்மையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு இன்றைய தினம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதன் பொருட்டு அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகத் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டானது 2ம் உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்து விமானப்...