நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 1 ஜூன், 2018

மர்மமான முறையில் பெல்ஜியத்தில் உயிரிழந்த இலங்கை யுவதி

வவுனியா - பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் உயிரிழந்துள்ளார்.
அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிள்றுது.
பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவராகும். இந்த நிலையில் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யுவதியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக