நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 7 மே, 2020

விமான நிலைய சோதனைக்கு முன்பும் பின்பும் பயணிகள் இரண்டு முறை கை கழுவ வேண்டும்

விமானப் பணிப்பெண்களின் அழகிய புன்னகை இனியில்லை கடலில் குளித்து விட்டு கடற்கரையில் ஓய்வு எடுப்பவர்கள் கூட இனிமேல் கண்ணாடித் திரைகள் மூலம் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் முன்பு இரத்தப் பரிசோதனைக்கு
 உட்படுத்தப்படுவோம். இது சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பயணிகளை பாதுகாப்பாக 
உணரச் செய்ய சில பயண நிறுவனங்கள் புதிதாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றன.சர்வதேச அளவிலான பயணம் குறித்து நாம் விரைவாக 
திட்டமிடுகிறோம் என்று கூட பலருக்குத் தோன்றலாம். ஆனால் அதுவும் உண்மைதான்’ என்கிறது ஆர்ஜென்டினா விமானப் போக்குவரத்து சேவை.தனது விமானப் போக்குவரத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இயக்கும் திட்டமில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த
 முறை விடுமுறை
 நாள் பயணத்திற்கு தான் எந்த முன்பதிவும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இனிமேல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் மக்கள் என்னென்ன மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.விமான நிலையங்களில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் 
என்பதை இங்கு பார்ப்போம்.
அமெரிக்காவில் விமான நிலைய சோதனைக்கு உட்படுத்தப்படும் முன்பும் பின்பும் பயணிகள் இரண்டு முறை விமான நிலையத்திலேயே கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுவும் 20 செச்கன்களுக்கு கை கழுவுவது அவசியம் என்றும் அமெரிக்க
 போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.உலகில் உள்ள பல 
விமான நிலையங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் முழுவதும் ‘ஹான்ட் சனிட்டைசர்கள்’ பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.சில நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் முழு உடலையும் கிருமிநாசினி சாதனத்தால் சுத்தம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதாவது
 உடலின் தோல் மற்றும் ஆடை மீது உள்ள கிருமிகளை முழுவதும் அகற்ற புதிய கருவிகளை உருவாக்கி வருகின்றனர். மேலும் ஒருவரின் ஆடை மற்றும் அவரின் தோல் மீது உள்ள கிருமியை ஒழிக்க 40 செக்கன்கள் மட்டுமே 
ஆகும். அவ்வாறு இந்த நடைமுறையை பின்பற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு
 வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், புற ஊதா ஒளியால் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றை அழிக்க தானியங்கி ரோபோக்களையும் பயன்படுத்தப் போவதாக விமானநிலையமொன்று அறிவித்துள்ளது.விமான நிலையத்தில் பயணச்சீட்டுஇ இருக்கை எண் பெற எலக்ட்ரோனிக் இயந்திரங்கள் உள்ள
 விமான நிலையங்கள் அந்த இயந்திரங்களையே நாள்தோறும் முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. தேவையற்ற தொடர்புகளை
 தவிர்க்க இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்த எலக்ட்ரோனிக் இயந்திரங்கள் உதவும்.ஏற்கனவே விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட உடல் வெப்பம் அறியும் கருவிகளால் பயனில்லை என ‘இன்ட்ரீபிட்’ பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் தொர்ந்டோன் 
கூறுகிறார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக