நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

தனக்குத் தானே தீ மூட்டி பாரிஸ் பிஹால் தொடருந்து நிலையத்தில் எரிந்த நபர்

பாரிஸ் பிஹால் (Pigalle) மெற்றோ ரயில் நிலையத்தின் பயணிகள் மேடையில்  சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. §5.04-2021.அன்று  வியாழக்கிழமை மாலை ஆறு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சுமார் எண்பது வீதமான உடற்பகுதிகள் எரியுண்ட நிலையில் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்ட அவர்,ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.அதிர்ச்சி அடைந்த பயணிகளில் ஐந்து பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
அந்த நபர் பயணிகள் மேடையின் தரையில் எரிந்து புரண்டுகொண்டு கிடந்த வேளை ரயில் ஒன்று அங்கு வந்து தரித்தது. அதில் வந்த பயணிகள் தீயில்ஒருவர் எரியும் காட்சியை அருகே நேரில் கண்டு அலறத் தொடங்கினர். இதனால்அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட நேர்ந்தது.அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உளவியல் சிகிச்சை 
வழங்கப் பட்டது.
“நான் ரயிலில் இருந்தேன். திடீரென பலரும் அலறும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தேன். மேடையில் பெரும் தீப்பிளம் பைக் கண்டேன். ரயில் கிளம்பவில்லை. சிலர் அழுது கொண்டு
 இறங்கி ஓடினர்.
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது” – இவ் வாறு பயணி ஒருவர் பரிஷியன் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
உடல் முழுவதும் பெற்றோல் ஊற்றி நனைத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்து அங்கு வைத்து அவர் தனக்குத் தீ மூட்டியுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு தற்கொலைக்கு
 முயன்றவர் யார் என்ற விவரங்கள் உடனடியாகத்தெரியவரவில்லை.
இந்தச் சம்பவம் காரணமாக மெற்றோ வழித்தடங்கள் 2, 12 ஆகியவற்றில் சேவைகள் சில மணிநேரம் தடைப்பட்டன என்று போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக