நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 26 மார்ச், 2020

உலகமே வியக்கும் வன்னம் கள முன்னணியில் நிற்க்கும் தமிழ் மருத்துவர்கள்-

பிரித்தானியா மட்டும் அல்ல, பல உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காணப்படும் இன் நிலையில், பல ஆயிரம் தமிழ் மருத்துவர்கள் களத்தில் நின்று சேவை புரிந்து வருகிறார்கள். அதிலும் பொதுவாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பல தமிழ் மருத்துவர்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி, பாதிக்கப்பட்ட நோயாளி
களுக்கு சேவை புரிந்து வருவது பாராட்ட தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவை பொறுத்தவரை தமிழர்கள் சுமார் 4 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இது அன் நாட்டு சனத்தொகையில் 1% சதவிகிதத்தை கூட எட்டாது. ஆனால் பிரிட்டனில் பல நூறு 
தமிழ் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக 2ம் தலை முறை, இளைய மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே களத்தில் முன்னணியில் நின்று செயப்பட்டு வருவது. தமிழர்களுக்கு 
மெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது. இன்றைய நிலையில், மருத்துவர்களையும் சுகாதார 
சேவைப் பிரிவினரையுமே மக்கள் பெரும் ஹீரோக்களாக பார்கிறார்கள். போர் காலங்களில் எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் 
ராணுவ வீரர்கள் போல.
இன்றைய வீரர்களாக மருத்துவர்களே உள்ளார்கள்..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பாரிய நிலநடுக்கம் குரில் தீவுகளில் சனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வாபஸ்

பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரில் தீவுகளில் இன்று காலை 7.5 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.ரஷ்யாவுக்கு
 சொந்தமான இந்த குரில் தீவுகளில் கடலின் அடியில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.இதனை அடுத்து, உடனடியாக 
குரில் தீவுகள் மற்றும் பசுபிக் பெருங்கடலில்
 அமைந்துள்ள ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் தொடர்ந்து நிலநடுக்கம் பதிவாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 24 மார்ச், 2020

நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன்

நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்?

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள்.

தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.

இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீதான ஒரு சமீபத்திய ஒரு ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நோயாளிகளில் பலருக்கு நீரிழிவு மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்தது கண்டறியப்பட்டது.

சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், சுமார் 28 நோயாளிகளுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும், 4 நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இறுதியாக, மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 140 நோயாளிகளில், 42 பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த மூன்று ஆய்வுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரு வகை மருந்துகளை (angiotensin-converting enzyme (ACE) inhibitors) எடுத்துக்கொண்டார்கள் என்பது கண்டறியப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ்கள் ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத் தாக்கி அவற்றினுள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியானது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களுக்கு உள்ளே நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. இது தவிர, நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாகலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்க வேண்டுமானால், நீரிழிவு நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா என்று மருத்துவர்களை ஆலோசித்து முடிவு செய்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.


சனி, 21 மார்ச், 2020

சீனாவை அடுத்து மனிதர்களை கொத்துக் கொத்தாக இழக்கும் இத்தாலி.

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் சீனாவை அடுத்து தற்போது அதிக உயிர்பலி வாங்கியிருப்பது இத்தாலியில் தான்.நேற்றைய தினத்தில் தாய் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி
 அனைவரையும் நெகிழ வைத்தது
 நாங்கள் செய்த தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள் என்று கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருந்தார்.இந்நிலையில், கொரோனா 
வைரஸ் எப்படி எளிமையாக ஒருவரிடமிருந்து 
மற்றொருவருக்கு பரவுகிறது 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனாவுக்கான தடுப்பூசி அமெரிக்கப் பெண்ணிற்கு சோதனை முயற்சி

அமெரிக்காவில் தன்னார்வலப் பெண் ஒருவருக்கு முதன் முறையாக கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது. 
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளில் தடம் பதித்துள்ளது. தற்போது சீனாவில் 
கட்டுபாட்டில் உள்ள இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.
கொரோனா வைரஸ்க்கு இதுவரை எந்த
 மருந்து மற்றும் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனவைத் தடுக்கும் 
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் கைசர் பெர்மனெட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனம் முதல்கட்டமாக பெண் தன்னார்வலருக்கு கையில் தடுப்பூசி ஒன்றை சோதனை முயற்சியாக போட்டுள்ளது.  இந்த சோதனையின் முடிவுக்காக 
ஆராய்ச்சியாளர்கள் காத்து உள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தற்காலிக உதவி திட்டத்தை அறிவித்தது

கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தாக்கம் காரணமாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுக்கு மற்றும் வேலை இல்லாதவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வாரத்திற்கு 573 டாலர் வரை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டம் யார் யாருக்கு பொருந்தும் என்று பார்ப் போமானால் கொரோனா வைரஸ் 
தாக்கம் உள்ளவர்கள், வைரஸின் அறிகுறி உள்ளவர்கள்,கொரோனா வைரஸ் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு இந்த திட்டம் மூலம் உதவித் தொகை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொழிலாளர்களுக்கான தற்காலிக உதவி திட்டம் (PATT or Programme d’aide temporaire aux travailleurs) என்று அழைக்கப்படும். இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த 150 மில்லின் நிதி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 13 மார்ச், 2020

பிரித்தானியா கொரோனாவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அரசின் திட்டம்

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள 
நிலையில், பிரித்தானியா அரசாங்கம் இது தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவில் பல பகுதிகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பாடசாலைகளை மூடுவது மற்றும் பெரிய அளவில் மக்கள் கூடுவதைத் தடை செய்வது, வீட்டில் இருந்தவாறு வேலை செய்யப் பணிப்பது போன்றவை இன்று அறிவிக்கலாம் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குளிருடன் இணைந்த
 அதிகரித்த வெப்பநிலை உடலில் இருந்தால் மக்களை வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கலாம் என ஸ்கொட்லாந்துக்கான அமைச்சர் அலிஸ்ரர் ஜாக் (Alister Jack) தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் இப்போது 460 பேருக்கு கொரோனா வைரஸ்
 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 இங்கிலாந்தில் 387, ஸ்கொட்லாந்தில் 36, வடக்கு அயர்லாந்தில் 18 மற்றும் வேல்ஸில் 19 என்ற எண்ணிக்கையில் நோயாளர்கள் உள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 460 பேர் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>