அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வீசிய கடும் புயல் காற்று காரணமாக 5 பேர் பலியாகினர். அந்த பிராந்தியத்தில் மணிக்கு 129 கிலோமீற்றர் வேகத்தில் புயல் வீசிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது வானூர்தி சேவைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளநிலை பலர் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள்
தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக