நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 31 டிசம்பர், 2020

அரசியல் தஞ்சம் பிரித்தானியாவில் கோரியுள்ள பெருமளவு இலங்கைத் தமிழர்கள்

பிரித்தானியாவில் 6718 இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த 4 வருடங்களில் குறித்த இலங்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மரண அச்சுறுத்தல் உள்ளதாககூறி குறித்த  இல்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளனர்.இவர்களில் 144 இலங்கையர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரசியல் பாதுகாப்பு கோரிய நபர்களில் நூற்றுக்கு...

வியாழன், 10 டிசம்பர், 2020

முகநூல் தளத்துடன் இணைந்த மெசஞ்சர் உலக அளவில் பாதிப்புற்றது

உலக அளவில் முகநூல் தளத்துடன் இணைந்த மெசஞ்சர் செயலியின் இயக்கம் கடந்த ஒன்றரை மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பா நாடுகளில் மதியம் 2.30 மணிக்கும் இலங்கையில் 3.55 மணியில் இருந்தும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனை சரிசெய்யும் பணியில் மெசஞ்சம் தொழில்நுட்ப குழு ஈடுபட்டுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

செவ்வாய், 1 டிசம்பர், 2020

பாதசாரிகளை ஜேர்மனியில் மோதித்தள்ளியது கார் நால்வர் ஸ்தலத்தில் பலி

ஜேர்மனியில் கார் ஒன்று பாதசாரிகளை மோதித்தள்ளிய சம்பவத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டிரையரில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவோ அல்லது மதரீதியாகவோஇடம்பெற்றதாக தாம் கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.நகர...

ஞாயிறு, 29 நவம்பர், 2020

காரை வழிமறித்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட அணுவிஞ்ஞானி

காரை வழிமறித்து ஈரானின் ராணுவ ஆலோசகரும், மூத்த அணு விஞ்ஞானியுமான மொஹ்சென் பக்ரிசாதே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது. இதனால், ஈரான் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படுகொலையால் ஆவேசம் அடைந்துள்ள ஈரான் அதிபர் ரவுகானி, ‘இதற்கு சரியான நேரத்தில் பழி தீர்ப்போம்’ என்று கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘ராணுவத்தினர் பதுங்கிப் பாய்ந்து தாக்குவது போல, ஒரு விஞ்ஞானியை மறைந்திருந்து வழி...

செவ்வாய், 24 நவம்பர், 2020

இந்தியா மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது

இந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக 24-11-20.இன்று (செவ்வாய்க்கிழமை)  அறிவித்துள்ளது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69-ஏ பிரிவுக்கு உட்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடும் காரணத்தால் முழுவதுமாக தடை செய்யப்படுகின்றன...

திடீரென பிரான்ஸில் தன்னார்வலர்களால் அமைக்கப்பட்ட அகதி முகாம்கள்

பிரான்ஸில் திடீரென பல்வேறு தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் இணைந்து, அகதி முகாம்களை அமைத்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Place de la République என்ற பகுதியில் 23-11-20.அன்று  (திங்கட்கிழமை) மாலை மாலை 7 மணி அளவில் இங்கு வந்து சேர்ந்த பல நூறு வரையான தன்னார்வ தொண்டர்கள், சிறிய கூடாரங்களை அமைத்து அதற்குள் இருந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கிருந்த கூடாரங்களை அப்புறப்படுத்தினர்....

திங்கள், 16 நவம்பர், 2020

பராக் ஒபாமா பதில் என் மனைவி என்னைப் பிரிந்து சென்றுவிடுவார்

ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம் பெற்றால் தனது மனைவி பிரிந்து சென்று விடுவார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று தெற்காசியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகிறார்.இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு...

சனி, 14 நவம்பர், 2020

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம்    .நிலாவரை.கொம்  இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம்...

திங்கள், 9 நவம்பர், 2020

தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ட்ரம்புக்கும் அவரது மூன்றாவது மனைவி மெலானியாவுக்கும் இடையே மனக் கசப்பு இருந்ததாகவும் ட்ரம்ப் அதிபராக இருக்கும் போது விவகாரத்து பெற்றால் தான் தண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தற்போதுவரை காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலானியா விவாகரத்து செய்வார் என,...

வெள்ளி, 6 நவம்பர், 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களம்..வெள்ளை மாளிகையை கைப்பற்றப் போவது யார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என மாநில செயலாளர் கெத்தி புக்வோர் தெரிவித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார்.பைடனுக்கு 50.4 வீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில்,...

வியாழன், 5 நவம்பர், 2020

தேர்தல்..2020- பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்து வெற்றி நடை போடும் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார்.தற்போதுவரை ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%)என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல்...

புதன், 4 நவம்பர், 2020

விண்வெளியிலிருந்து அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்தர் கேட் ரூபின்ஸ்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார்.கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்தார் ரூபின்ஸ். குறை புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டு இவர் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.¨ நிலாவரை.கொம் செய்திகள் >>&...

ஞாயிறு, 1 நவம்பர், 2020

பிரித்தானியா..அடுத்த வாரம் முழுமையாக லொக்டவுணுக்கு செல்கிறது

அதிதீவிரமாக மாறும் கொரோனா.. வேறு வழியில்லாமல் அடுத்த வாரம் முதல் நாடு தழுவிய ரீதியில் லொக் டவுனை அறிவிக்க பொறிஸ் ஜேன்சன் தயாராகி வருவதாக  செய்திகள் வெளியாகி உள்ளது. இது நாள் வரை லொக் டவுன் என்னும் பிரச்சனை இழுபறி நிலையில் இருந்தது.ஆனால், மருத்துவ விஞ்ஞானிகள் கொடுத்த அறிக்கை ஒன்றை முற்றாக படித்துப் பார்த்த பிரித்தானிய பிரதமர், லொக் டவுன் ஒன்றை கொண்டு வந்தால் தான், நிலையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியும் என்ற முடிவை எட்டியுள்ளார்...

வியாழன், 29 அக்டோபர், 2020

நிலநடுக்கம் துருக்கி, கிரீஸ் நாடுகளில் 7 ரிக்டர் அளவில் 14 பேர்உயிரிழப்பு

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில்,30-10-20. இன்று மதியம் இடம்பெற்ற நில அதிர்வில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் படுகாயமடைந்துள்ளனர்.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல கட்டங்கள் இடிந்துள்ளன. மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 மைல் தொலைவில் ஏஜியன் கடல் மத்தியில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. நிலாவரை.கொம்...

வியாழன், 22 அக்டோபர், 2020

பிரீசரில் ஒரு வருடத்திற்கு வைத்த நூடுல்ஸ்சை சாப்பிட்ட 9 பேருக்கு நேர்ந்த சோகம்

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது. அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் திகதி அன்று சமைத்து சாப்பிட்டு உள்ளனர். இதில் 8 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்டு...

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் மரணம்

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக பிரேசிலின் சுகாதார ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது.உயிரிழந்த அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று சாவோபோலோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.ரியோ...

செவ்வாய், 20 அக்டோபர், 2020

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளார்.வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.அதற்கமைய எதிர்வரும் 28ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையிலேயே அவர் கலந்துகொள்ளவுள்ளார். நிலாவரை.கொம் செய்திகள் >>&...

திங்கள், 19 அக்டோபர், 2020

நிலச்சரிவில் சிக்கி வியட்நாமில் 22 இராணுவ வீரர்கள் மாயம்

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.குவாங் திரியில் இராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளனர்.இந் நிலையில் அண்டை மாகாணமான துவா தியென் ஹியூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் இராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.¨ நிலாவரை.கொம் செய்திகள் >>>...

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி

நியூஸிலாந்து பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.77 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆர்டெர்னின் இடது சாரி தொழிற்கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.தொழிற்கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான மத்திய-வலது தேசியக் கட்சி 27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.இதன்போது, தேசியத் தலைவர் ஜூடித் காலின்ஸ், தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, ஆர்டெர்னை வாழ்த்தினார்.முடிவுகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. சிறப்பு...

புதன், 14 அக்டோபர், 2020

நீங்கள் பழைய ஆடைகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

ஆடைகளை எந்த மறுசுழற்சி தொட்டியில் இடுகிறீர்கள் எங்கள் இல்லத்தில், பழைய துணிகளை அவை கிழியும் வரை நாங்கள் அப்புறப்படுத்திடுவதில்லை. அவை கிழிந்தால், அவை அரதக் கந்தல் ஆகும் வரை, அவற்றை வீட்டைத் தூய்மை செய்யப் பயன் படுத்துகிறோம். அரத்தக் கந்தல் ஆனதும் அவற்றை எரித்துவிடுகிறோம். தேவையின்றித் துணிகளை வாங்குவதே இல்லை.தொடர்புடைய கேள்விகள்சரியான மற்றும் நேர்த்தியான முறையில் உடை அணிவது எப்படி என ஆண்களுக்கு சொல்ல முடியுமா?ஆடையை நேர்த்தியாக மடிப்பது எப்படி?பெண்களின்...

சனி, 10 அக்டோபர், 2020

நியூசிலாந்து அரசு அறிவிப்பு கொரோனாவின் 2 வது அலையையும் தோற்கடித்துவிட்டோம்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதில், வெற்றி பெற்ற நாடுகளில் முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது.அந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்ட உடனே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதால், ஊரடங்கு தளர்பட்டது.ஆனால், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே ஆக்லாந்தில்...

புதன், 7 அக்டோபர், 2020

ஒரே நாளில் பிரித்தானியாவில் 14,500 பேருக்கு கொரோனா தொற்று

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணாக இதுவரை சுமார் 42,500 பேர் வரையில் இறந்துள்ளார்கள். 530000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,542 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளது.பிரித்தானிய அரசாங்கமும் இறுக்கமான கட்டுப்பாடுகள், விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினாலும், எப்படி கொரோனாவை பரப்புகின்றார்கள் என்று பார்க்கின்றீர்களாபெரும்பாலான மக்கள் அந்த விதிமுறைகளை மீறும் செயல்களில்...