கனடா பிராம்ப்டனைச் சேர்ந்த 20 வயது, தமிழ் இளைஞன் சொகுசுக் கார் ஒன்றைத் திருடிச் செல்லும் போது
பொலிசாரினால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இது செப்டம்பர் 16 அன்று மாலை 4:30 மணிக்கு முன்பு நடந்தது. திருடப்பட்ட 2019 மெர்சிடிஸ் கார் வீட்டின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது
திருடப்பட்டதாக பிராந்திய காவல்துறை தெரிவித்தது.முதலில் ஒரு பொலிஸ் ரோந்து கார் வாகனத்தை நிறுத்த முயன்றது,
ஆனால் அதனால், கார்திருடரை துரத்துவது போக்குவரத்து நெரிசலான நேரத்தில் சாத்தியமாகவில்லை. மேலும் காரைத்திருடியவர் அதிகவேகமாக காரைச் செலுத்தியதால் பொலில் கெலிகாப்படர்
வரவழைக்கப்பட்டு துரத்துதல் தொடர்ந்தது. பட்டப்பகலில் திரைப்படங்களில் வரும் துரத்தல் காட்சிகளைப்போல இது இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக