நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 5 செப்டம்பர், 2020

திருமணமாகி சில நாட்களில் கனடாவில் நடந்த கோர விபத்தில் இருவர் பலி

கனடாவில் நேற்று ஏற்பட்ட வீதி விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக ரொரோற்றோ Blue Mountains தெரிவித்துள்ளனர்.ஒன்டாரியாவின் Blue Mountains நகரில் 04-09- 2020.அன்று.இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.Oshawa மற்றும் Whitchurch-Stouffville நகரங்களை சேர்ந்த 29 வயதான இரண்டு தமிழர்களே 
உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் கஜன் தனபாலசிங்கம் என உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இவர் கடந்த 29ஆம் திகதி திருமணம் செய்து கொண்டவர் எனவும் தெரியவருகின்றது.உயிரிழந்த இருவரும் பயணித்த 
Audi sedan கார் வீதியை விட்டு வெளியேறி
 ஒரு மரத்துடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.24 வயதான வாகனத்தின் ஓட்டுநரான Whitchurch-Stouffville நகரை சேர்ந்த 24 வயது இளைஞன் Collingwoodடில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு 
செல்லப்பட்டார். பின்னர் தீவிரமான நிலையில் அவர் விமானம் மூலம் Toronto பகுதி மருத்துவமனைக்கு கொண்டு
 செல்லப்பட்டுள்ளார்.இந்த விபத்து நிகழந்த போது, வாகனத்தில் மூன்று பேர் இருந்ததாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனம் வீதியை விட்டு வெளியேற என்ன காரணம் என்பது குறித்த கால்வதுறையினரின் விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக