நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 3 செப்டம்பர், 2020

தீப்பற்றியெரியும் பாரிய கப்பல் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில்

 

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் 
உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.கப்பலின் எஞ்ஜின் அறையில்
 ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மீட்புப் பணிகளுக்காக இரண்டு 
கடற்படை கப்பல்கள் குறித்த 
பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிய ரக விமானம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை 
தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக