நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 14 மார்ச், 2021

காவல்துறை மேலதிகாரியிடம்பாரிஸ் மெற்றோ தொடருந்தில் ‘பிற் -பொக்கற்’ கைவரிசை

 பாரிஸ் மெற்றோ ரயில்களில் மீண்டும் இளவயது பிற் பொக்கற் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து காவல்துறை  பயணி களை எச்சரித்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று பகல் பாரிஸ் மெற்றோ ஒன்றில் பயணித்த காவல்துறை  கொமாண்டோ உத்தியோகத்தரின் பணப்பை ‘பிக்-பொக்கற்’ திருடர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை ‘பரிஷியன்’ செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது.
தனது பணப்பையைப் பறிகொடுத்ததை அறிந்ததும் உடனடியாக Gare de L’Est ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த அதிகாரி போக்குவரத்துப் பொலீஸாரிடம் முறையிட்டார். திருடப்பட்ட பணப்பையில் இருந்த 
அவரது வங்கிக் கடன் அட்டை மூலம் சொற்ப 
நேரத்தில் இரண்டு 
தடவைகள் 500 ஈரோக்கள் பணம் வங்கியில் மீளப்பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக நகர வங்கிப் பணப்பரிமாற்ற
 இயந்திரங்களின் கண்காணிப்புக் கமராக்கள் சோதனை 
செய்யப்பட்டன. அதன் மூலம் பெறப்பட்ட காட்சிகளைக் கொண்டு பாரிஸ் 18 ஆம் நிர்வாகப் பிரிவில் வைத்து பணப்பைத் திருடர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
எட்டுப் பேர் கொண்ட பதின்ம வயதுடைய பிக்-பொக்கற் கும்பல் ஒன்றே இவ்வாறு நெற்வேர்க் பிரிகேட் பொலீஸாரிடம் சிக்கியது. அனைவரும் பொஸ்னிய (Bosnian) நாட்டவர்கள் என்பது 
தெரியவந் துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் நெதர்லாந்து நாட்டின் பெண் ஒருவரிடம் அவரது பணப்பை திருடப்பட்டு அதில் இருந்த வங்கி அட்டை மூலம் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. Luxembourg RER ரயில் தரிப்பிடத்தில் அந்தப் பெண் பயணி தனது வங்கி அட்டையைப் பயன்படுத்தி ரிக்கெற் பெற்றுக்கொண்ட சமயம் சிறுவர் 
பிக்-பொக்கற் கும்பல் 
ஒன்று அவரது வங்கி அட்டையின் இரகசியக் குறியீட்டு இலக்கங்களை 
அறிந்து கொண்டு அவரோடு கூடவே ரயிலில் பயணித்து 
அங்கு வைத்து அவரது பணப்பையைத் திருடி உள்ளனர். சுமார் அரை மணி நேரத்துக்குள் அந்தப் பெண்ணின் வங்கிக் கடன்
 அட்டை மூலம் அவரது கணக்கில் இருந்து பணம் அபகரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந் துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர் திருட்டுக் கும்பல்கள் இவ்வாறு ரயில்களில் பயணிகளிடம் பணப்பை களை நுட்பமாக அபகரிக்கும் சம்பவங் கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து இடம் 
பெற்றுவருகின்றன.
வன்முறையை வெளிப்படுத்தாமல் மிகவும் பவ்வியமாக – தங்களை அப்பாவிச் சிறுவர்கள் போன்று பாவனை காட்டி – பயணிகளின் உடைமைகளை அபகரிக்கின்ற இந்தக் கும்பல்களைச் சேர்ந்தோர் அவர்களின் வயது காரணமாகத் தண்டனைகளில் இருந்து தப்பிவிடுகின்றனர்.அல்லது சிறுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் உல்லாசப் பயணிகளையே குறிவைக்கின்றனர். பொஸ்னிய பூர்வீகத்தைக் கொண்ட சட்டவிரோத வலைப்பின்னல் ஒன்றே சிறுவர்களை இவ்வாறு கட்டாயத்தின் பேரில் திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றது என்று காவல்துறை  அதிகாரிகள்
 தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் நெருக்கடியால் நகருக்கு உல்லாசப் பயணிகளது வருகை தடைப்பட்டதை அடுத்து ரயில்களில் இவ்வாறான திருட்டுக்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது மீண்டும் பிக்-பொக்கற் அபகரிப்புகள் தொடங்கியுள்ளன என்று பாரிஸ் நகரப் போக்கு வரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.


 

 பாரிஸ் மெற்றோ ரயில்களில் மீண்டும் இளவயது பிக்-பொக்கற் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து காவல்துறை  பயணி களை எச்சரித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று பகல் பாரிஸ் மெற்றோ ஒன்றில் பயணித்த காவல்துறை  கொமாண்டோ உத்தியோகத்தரின் பணப்பை ‘பிக்-பொக்கற்’ திருடர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை ‘பரிஷியன்’ செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது.

தனது பணப்பையைப் பறிகொடுத்ததை அறிந்ததும் உடனடியாக Gare de L’Est ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த அதிகாரி போக்குவரத்துப் பொலீஸாரிடம் முறையிட்டார். திருடப்பட்ட பணப்பையில் இருந்த அவரது வங்கிக் கடன் அட்டை மூலம் சொற்ப நேரத்தில் இரண்டு தடவைகள் 500 ஈரோக்கள் பணம் வங்கியில் மீளப்பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக நகர வங்கிப் பணப்பரிமாற்ற இயந்திரங்களின் கண்காணிப்புக் கமராக்கள் சோதனை செய்யப்பட்டன. அதன் மூலம் பெறப்பட்ட காட்சிகளைக் கொண்டு பாரிஸ் 18 ஆம் நிர்வாகப் பிரிவில் வைத்து பணப்பைத் திருடர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

எட்டுப் பேர் கொண்ட பதின்ம வயதுடைய பிக்-பொக்கற் கும்பல் ஒன்றே இவ்வாறு நெற்வேர்க் பிரிகேட் பொலீஸாரிடம் சிக்கியது. அனைவரும் பொஸ்னிய (Bosnian) நாட்டவர்கள் என்பது தெரியவந் துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் நெதர்லாந்து நாட்டின் பெண் ஒருவரிடம் அவரது பணப்பை திருடப்பட்டு அதில் இருந்த வங்கி அட்டை மூலம் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. Luxembourg RER ரயில் தரிப்பிடத்தில் அந்தப் பெண் பயணி தனது வங்கி அட்டையைப் பயன்படுத்தி ரிக்கெற் பெற்றுக்கொண்ட சமயம் சிறுவர் பிக்-பொக்கற் கும்பல் ஒன்று அவரது வங்கி அட்டையின் இரகசியக் குறியீட்டு இலக்கங்களை அறிந்து கொண்டு அவரோடு கூடவே ரயிலில் பயணித்து அங்கு வைத்து அவரது பணப்பையைத் திருடி உள்ளனர். சுமார் அரை மணி நேரத்துக்குள் அந்தப் பெண்ணின் வங்கிக் கடன் அட்டை மூலம் அவரது கணக்கில் இருந்து பணம் அபகரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந் துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர் திருட்டுக் கும்பல்கள் இவ்வாறு ரயில்களில் பயணிகளிடம் பணப்பை களை நுட்பமாக அபகரிக்கும் சம்பவங் கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றன.

வன்முறையை வெளிப்படுத்தாமல் மிகவும் பவ்வியமாக – தங்களை அப்பாவிச் சிறுவர்கள் போன்று பாவனை காட்டி – பயணிகளின் உடைமைகளை அபகரிக்கின்ற இந்தக் கும்பல்களைச் சேர்ந்தோர் அவர்களின் வயது காரணமாகத் தண்டனைகளில் இருந்து தப்பிவிடுகின்றனர்.அல்லது சிறுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் உல்லாசப் பயணிகளையே குறிவைக்கின்றனர். பொஸ்னிய பூர்வீகத்தைக் கொண்ட சட்டவிரோத வலைப்பின்னல் ஒன்றே சிறுவர்களை இவ்வாறு கட்டாயத்தின் பேரில் திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றது என்று காவல்துறை  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் நகருக்கு உல்லாசப் பயணிகளது வருகை தடைப்பட்டதை அடுத்து ரயில்களில் இவ்வாறான திருட்டுக்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது மீண்டும் பிக்-பொக்கற் அபகரிப்புகள் தொடங்கியுள்ளன என்று பாரிஸ் நகரப் போக்கு வரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக