நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 22 ஜூலை, 2015

விமானங்கள்:மோதச்சென்ற வேளை நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

108 பயணிகளுடன் சென்ற லுப்தான்சா விமானம் நூலிழையில் பயங்கர விபத்திலிருந்து தப்பியுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா எம்ப்ரேர் இ.ஆர்.ஜே. -195 (Lufthansa Embraer ERJ-195) என்ற விமானம் 108 பயணிகளுடன் முனீச் நகரிலிருந்து போலந்து நாட்டின் வார்சா சென்றது.
அப்போது, வார்சா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வானிலிருந்து உயரத்தை குறைத்து இறங்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது, ஆளில்லா விமானம் ஒன்று லுப்தன்சா 
விமானத்திற்கு எதிரே 100 மீற்றர் தொலைவில் 760 மீற்றர் வேகத்தில் வந்துகொண்டிருந்தது.
இதனால் இரண்டு விமானங்களும் மோதும் நிலை ஏற்பட்டதால்
, லுப்தான்சா விமானி சாதுர்யமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், கட்டுப்பாட்டு அறையுடான தொடர்பை மீறி ஆளில்லா விமானம் பறந்து வந்தது எப்படி என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
50 மீற்றர் உயரத்திற்கு மேல் ஆளில்லா விமானம் பறக்கவிடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் போலந்து நாட்டில் உள்ளது என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக