நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 22 ஜூலை, 2015

பொலிசை மார்பகத்தால் தாக்கிய பெண்னுக்கு சிறை தண்டனை கிடைக்குமா? (காணொளி )

ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் பொலிசாரை மார்பகத்தால் தாக்கிய பெண்ணை குற்றவாளி என நீதிபதி அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஹாங்காங் நகரில் உள்ள யூன்லாங் பகுதியில் இரட்டை வர்த்தக முறை கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக நிக் லாய்-யிங் (30) என்ற பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
அப்போது, சான் என்ற பொலிஸ், தன்னிடம் இருந்த கைப்பயை பறிப்பதற்கு பதிலாக வேண்டுமென்றே தனது மார்பகங்களின் மீது கை வத்தார் என லாய் யிங் புகார் தெரிவித்தார்
இதுதொடர்பான வழக்கு ஹாங்காங் நீதிமன்றத்தில் நடந்துவந்ததையடுத்து, வன்முறை தொடர்பாக வெளியான வீடியோவில், பொலிஸ்காரர் அப்பெண்ணின் மார்பகங்களில் கை வைக்கவில்லை, மாறாக அப்பெண்ணே தனது மார்பகங்களால் சானை தாக்கியிருப்பது தெரியவந்தது.
எனவே அவர் கூறிய குற்றச்சாட்டு பொய் என்பதால், இதுவும் ஒரு வித தாக்குதலே என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார், மேலும் அவரை குற்றவாளி எனவும் அறிவித்துள்ளார்.
தற்போது லாய் யிங்கிற்கு தண்டனை எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த மாத இறுதியில் அவருக்கும் சிறைதண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக