நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 31 ஜூலை, 2015

தமிழர்கள் இன்னும் 30 ஆண்டுகளில் என்ன செய்வார்கள்???

புலம்பெயந்து வாழும் எங்களின் (மரணத்துக்கு பின்பு ) இலங்கைத் தொடர்புகள் முற்றாக அழிந்துவிடும் .
ஏனென்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும், ஊருக்குப் பணம் அனுப்புவதும் எங்களுடன் முடிவடையும், இலங்கைக்கு விடுமுறையில் செல்வதும் எங்களுடன் முடிவடையும்.
அப்பப்பா, அம்மப்பா, அம்மமா, அப்பமா, மாமா, மாமி என்று நேரில் போய் பார்ப்பதும், கோவில் திருவிழாக்களுக்கு போவதும் எங்களுடன் முடிவடையும். எங்கள் ஆயுளுக்கு பின் எங்கள் பிள்ளைகள் ஏன் அங்கு போவாகள்? எம் அடுத்த சந்ததி இங்கே 
வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும், அங்கு பணம் அனுப்ப அவர்களுக்கு யாரும் இல்லை, போன் கதைக்க யாரும் இல்லை, அவர்கள் அங்கு tour போகும்போது எதாவது ஹோட்டலில் இருந்து நிலாவரை கிணத்தையும், கீரிமலை,சிகிரியா எல்லாத்தையும் ரசித்துவிட்டு ஒரு வேற நாட்டுகாரர் மாதிரி மட்டும் enjoy பண்ணமுடியும்.
அதோடு நிறைய காசும் 1 நாள் விமானபயணம் செய்து அங்கு ஏன் போவார்கள்? அவர்களுக்கு வரும் girl அல்லது boy friend விரும்புவார்களா? என்ன கொடுமை !!!! எங்களுடன் எங்கள் பிறந்த நாடு 
மறக்கப்படுகிறது... இப்போது நாங்கள் மலேசியா,சிங்கப்பூர் வாழ் தமிழரை எப்படி பார்க்கிறோமோ அதைப்போல எங்கள் பேரப்பிள்ளைகள் இனி யாழ்ப்பாணத்தையும் ஒரு தமிழ் இனம் வாழும் இடமா உலகப்படத்தில் காட்டுவார்கள் !!
- ஆக்கம் பிரகாஸ் ... ( தவிர்க்க முடியாத உண்மை )
கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக