நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 26 ஜனவரி, 2018

சீனா!! ஒரே இரவில் 09 மணித்தியால ஒரு ரெயில் நிலையத்தை நிர்மாணித்து

அசாத்திய வேகம், தெளிவான திட்டம் ஆகியவற்றால் சீனா எந்த சவால்களையும் இலகுவாக முறியடித்து விடுகின்றது. அவர்களின் கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ திட்டங்களை கூறினாலும், சமீபத்தில் ஒரே இரவில் ஒரு ரெயில் நிலையத்தையே 
முழுவதுமாக 
கட்டமைத்துள்ளனர்.ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள லோங்யான் நகரில் தான் இந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் புதிதாக ரெயில்
 நிலையம் அமைக்க தேவைப்பட்டதால், கடந்த 19-ம் திகதி   இரவில் பணிகள் தொடங்கப்பட்டு மறுநாள் காலை முடிக்கப்பட்டுள்ளன. 9 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டன.
1500 தொழிலாளர்கள் 7 குழுக்களாக பிரிந்து தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளதாக சீனா
 டைஸிஜு கட்டுமான நிறுவனத்தில் துணை மேலாளர் ஷான் தாவ்சாங் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள்
, இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என அந்நாட்டு ரெயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக