நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 27 ஜனவரி, 2018

பிரான்ஸ் தலைநகரில் பெருக்கெடுக்கும் வெள்ள அனர்த்தம்

சென் நதி பெருக்கெடுத்துள்ளதால், பிரான்ஸ் தலைநகர் பெரிஸ்ஸில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், பெருமளவான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன நீரில் மூல்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக சென் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததைமையே இந்த வெள்ள
 நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல வீதிகள் நீர்ல் மூழ்கியுள்ளன. க்ரைமியன் இராணுவச் சிப்பாய் ஒருவரின் உருவச் சிலையே, பெரிஸ் நகரின் வெள்ள நிலைமையை மதிப்படும் அளவுகோளாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் வெள்ள நீர்மட்டம் அந்தச் சிலையின் கழுத்தளவுக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1910 ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த வெள்ளப் பெருக்கில்
, நீர்மட்டமானது,
 குறித்த சிலையின் கழுத்தளவில் காணப்பட்டதாகவும், அந்த வெள்ள நிலைமை இரண்டு மாதங்களுக்கு நீடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக